"நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதலுக்கு முன்னரே, இலங்கை தாக்குதல் திட்டமிடப்பட்டது"
நியூஸிலாந்தின், கிறைஸ்ட்சேர்ச் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னரே இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதல்களை நிகழ்த்த திட்டமிடப்பட்டிருப்பதாக நியூஸிலாந்தின் துணைப் பிரதமர் வின்சென்ட் பீட்டர் தெரிவித்துள்ளார்.
கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல்களில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பழிவாங்குவதற்காகவே இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் அவர், தனது நாடு இவ் விடயத்தில் துஷ்பிரயோகப் படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நியூஸிலாந்தின் வெளிவிவகார அமைச்சராகவும் இருக்கும் வின்சென்ட் பீட்டர், தனது அரசாங்கம் இரு சம்பவங்களுக்கும் இடையே தொடர்பிருப்பதற்கான எந்தச் சான்றையும் காணவில்லை என்றும் கூறியுள்ளார்.
You are telling the Truth Sir.
ReplyDeleteThank you very much for you for speaking the truth in Front of Terror Media's.