Header Ads



டன் பிரசாத், விடுதலை செய்யப்பட்டான்

நவ சிங்களே தேசிய அமைப்பின் பணிப்பாளர் டான் பிரியசாத் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

5 இலட்ச ரூபாய் சரீரப் பிணை இரண்டில் இவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இவருக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9 மணி தொடக்கம் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

  1. நான் நேற்றே சொல்லி விட்டேன்.அரசாங்கம் செய்யும் நாடகம்.இவர்களை கைது செய்வதும் பின்னர் விடுவிப்பதும்.கத்தி வைத்திருந்தவர்கலுக்கு பிணையில் கூட வர முடியாதலவுக்கு வழக்கு தாக்கல் செய்யும் பொலிசார்,இவர்களை போல இனவாதிகலுக்கு பிணை கிடைக்க வேண்டும் என்ரே வழக்கு தாக்கல் செய்வார்கள்.எனவே பொலிசாருக்கும் மிக மிக அரசியல் அலுத்தம் இருக்கின்ரது என்பது மிகவும் கசப்பானதும்,கேவலமான ஒரு உண்மை

    ReplyDelete

Powered by Blogger.