Header Ads



நாளை குண்டுவெடிப்புக்கள் இடம்பெறும் என பரவிவரும் தகவல்கள், உளவுத் துறையால் உறுதிப்படுத்தப்படாதவை

(எம்.எப்.எம்.பஸீர்)

நாளை 13 ஆம் திகதி திங்கட்கிழமை, கொழும்பின் வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பல இடங்களில் குண்டு வெடிப்புகள் இடம்பெறலாம் என சமூக வலைத்தலங்களில் பரவிவரும்  தகவல்கள் உளவுத் துறையால் உறுதிப்படுத்தப்படாதவை என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர கூறினார். 

எனினும் தமக்கு கிடைக்கும் எந்த ஒரு தகவலையும் இலேசாக தாம் கருதவில்லை எனவும் அதனால் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும் மக்கள் வீண் அச்சம் கொள்ளாது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

1 comment:

  1. அப்படியாயின் இந்த தகவலை முதலில் வெளியிட்ட மகிந்த இராஜபக்சயை கைதுசெய்வீர்களா? இதுவே பொது மகனென்றால் ஊர்ஜிதம் பன்னுவதற்கு முன்னெரே கைது செய்திருபீர்கள்.என்ன நியாயம்டா?

    ReplyDelete

Powered by Blogger.