Header Ads



தற்கொலையாளி ரில்வானின், மாமியார் வீட்டில் தற்கொலை அங்கி மீட்பு - இருவர் கைது


மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தற்கொலை குண்டு தாரியான முகமது காசிம் முகமது ரில்வானின் மாமியாரின் வீட்டில் இருந்து இன்று (02) பிற்பகல் தற்கொலை அங்கி மற்றும் கையடக்க தொலைபேசிகள், வங்கிகணக்கு புத்தகம், ரில்வானின் அடையாள அட்டை உட்பட பலபொருட்களை மீட்கப்பட்டதுடன் இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து கல்முனை சாய்ந்தமருது சுனாமி வீட்டு திட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட முகமது காசிம் முகமது ரில்வானின் மனைவியின் தாயாரது வீட்டை இன்று பிற்பகல் வவுணதீவு விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி ரத்நாயக்கா மற்றும் காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி ஆகியோரின் கீழ் பொலிஸாரும் இணைந்து தேடுதல் வேட்டை நடாத்தினர். 

இதன் போது அங்கிருந்து தற்கொலை அங்கி ஒன்றும், 4 கையடக்க தொலைபேசிகள், வங்கி ஏ ரி எம் அட்டை 2 , ரில்வானின் தேசிய அடையாள அட்டை, வங்கி புத்தகம் ஒன்று என்பன மீட்கப்பட்டதையடுத்து ரில்வானின் மனைவியின் தாயர் முகமது லெப்பை சித்திக் பஜீரியா, தந்தையான சாகல் சமுது நாசார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர் . 

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

(ரவணன்)

No comments

Powered by Blogger.