Header Ads



ஆஸாத் சாலி பதவி விலக வேண்டும், இல்லாவிட்டால் கொழும்பை சுற்றிவளைப்போம்

மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலி நாளை பதவி விலக வேண்டும் எனவும் இல்லாவிட்டால் நாளை -28- கொழும்பை சுற்றிவளைப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

 ஊடக மாநாடு ஒன்றை நடத்திய மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலி, சாபி ஷிஹாப்தீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவரது செயற்பாடு குறித்த விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உள்ளது.

இன்று குருனாகல் வைத்தியசாலைக்கு களவிஜயம் மேற்கொண்ட அவர் மேலும் கூறுகையில் ,

சஹ்ரானின் வெடிகுண்டை விட பயங்கரமானது டொக்டர் ஷாபியின் விவகாரம் குறித்த விடயம் நிரூபணம் ஆனால் தாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம்.இதனை திட்டமிட்ட இரு இனச்சுத்திகரிப்பாகவே நாம் பார்க்கிறோம்.

நாம் இதற்கு பிறகு நடு வீதியில் இறங்கி இந்த நாட்டை வழிநடத்துவோம் என அவர் குறிப்பிட்டார்.

3 comments:

  1. ஒரு ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் அரசுக்கு அச்சுறுத்தல் விடப்படுகிறது.

    இவையெல்லாம் எந்தச் சட்டத்தின்கீழ் அனுமதிக்கப்படுகிறது ???

    ReplyDelete
  2. Your all will desroy the entire country.theruwan saranai

    ReplyDelete
  3. These monks are disgraceful to our Mother land, they open the mouth only for racism!

    ReplyDelete

Powered by Blogger.