Header Ads



கோவில் வளாகத்தில் வெடிக்கும் நிலையில் குண்டு, வயர்கள் கண்டுபிடிப்பு (படங்கள்)

- பாறுக் ஷிஹான் -

கோவில் வளாகத்தில் வெடிக்கும் நிலையில் கைக்குண்டு மற்றும் வயர்கள் காணப்படுவதாக  சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று(7) மாலை 5 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வளாக மலசல கூடத்திற்கு அருகே வெடிக்கும் நிலையில் காணப்பட்டுள்ளது.

இதன் போது கோவில் பராமரிப்பாளர் வழங்கிய தகவலுக்கு அமைய ஆலய பரிபாலன தலைவர் சம்மாந்துறை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவு நாளை காலை சம்பவ இடத்திற்கு வருவதாக அறிவித்துள்ளது.

இதே வேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இக்கோயில் வாழை தோட்டம் ஒன்றில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு ஒன்று, ரம்போ கோடாரி, மற்றும் வாள் ஒன்று பொலித்தீன் உறை ஒன்றில் இடப்பட்டு உரப்பை ஒன்றில் போடப்பட்டு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


2 comments:

  1. தொடர்ச்சியாக இவ்வாறு அங்கே கண்டுபிடிக்கப்படுவதால் முதலில் கோவில் நிர்வாகத்தை ஆழமாக விசாரிக்க வேண்டும்.இப்போதய சூழ் நிலயை வைத்து Muslim கலுக்கு எதிராக ஏதோ ஒரு சதி திட்டம் அவர்களால் வகுக்கப்பட்டுள்ளது

    ReplyDelete
  2. இது நிச்சயமாக தமிழ் பயங்கரவாதிகளின் வேலையாக தான் இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.