பாலங்களை தகர்க்க பயங்கரவாதிகள், தயாராகிவருவதாக பொலிஸாருக்கு தகவல்
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் முக்கிய பாலங்களை, குண்டு வைத்து தகர்க்க பயங்கரவாதிகள் தயாராகிவருவதாக, பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் பின்னணியின், மேலும் பல திட்டங்கள் இருக்கலாமென, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், பொலிஸ் திணைக்களம் சகல பொலிஸாரையும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment