தற்கொலை குண்டுதாரியுடன் நெருங்கிய தொடர்பாம் - கொழும்பு பல்கலைக்கழக மாணவர் கைது
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டல் தற்கொலை குண்டுதாரி இன்ஷாப் அஹமட் உடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக கூறப்படும் கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலை குண்டுதாரியின் தொலைபேசியை சோதனையிட்ட போது கிடைத்த தகவல்களை அடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மற்றும் தற்கொலை குண்டுதாரி இன்ஷாப் அஹமட் ஆகியோருக்கிடையில் கையடக்கத்தொலைபேசி மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.DC
Post a Comment