Header Ads



முஸ்லிம் வர்த்தகரின் பேஸ்புக் பதிவா, சிலாபம் வன்முறைக்கு காரணம்...?

சிலாபத்தில் இன்று -12- காலை ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் இட்ட முகநூல் பதிவே காரணமென தெரிவித்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்

ஆனால் அவர் இட்ட பதிவொன்றை தவறாக விளங்கிக் கொண்ட ஒரு குழுவே குழப்பம் விளைவித்துள்ளது.

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் குறித்தான தனது விசனத்தை வெளியிட்ட ஹஸ்மார் ஹமீட் என்ற வர்த்தகர் , அளவுக்கதிகமாக சிரித்தால் ஒரு நாள் அழ வேண்டியும் வரும் என்பதை ” Dont laugh more 1 day u will cry ” . என்று தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .



ஆனால் அதனை மொழிபெயர்த்த சிங்கள இளைஞர்கள் சிலர் , ” இன்று மட்டும் தான் நீங்கள் சிரிப்பீர்கள் நீங்கள் அழ இன்னும் ஒரு நாள் இருக்கிறது ” என்று பதிவிடப்பட்டதாக உணர்ந்து அதன் உண்மைத் தன்மையை கேட்கவே மேற்படி வர்த்தகரின் கடைக்கும், பொலிஸுக்கும் சென்று தர்க்கத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அந்த பிரச்சினை பூதாகரமானது .

ஏற்கனவே நாளை திங்கட்கிழமை ஏதும் அசம்பாவிதங்கள் நடக்கலாமென செய்திகள் பரவியிருந்த நிலையில் இதனை அதனுடன் ஒப்பிட்டதால் இந்த களேபரம் ஏற்பட்டுள்ளது.

எப்படியாயினும் தற்போது வர்த்தகரை கைது செய்துள்ள பொலிஸ் இந்த பதிவு தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகிறது. SIVARAJAH-

3 comments:

  1. அந்த வர்த்தகருக்கு முதலில் செருப்பால் அடிக்க வேண்டும்.நாடும்,நமது மதத்தினருக்கும் இப்ப உள்ள நிலமயில் இவனுக்கெல்லாம் ஏன் தேவையில்லாத வேலைகளும்,தெவையில்லாத பதிவுகளும்.சில மாதங்களுக்காவது சிறையில் வைக்க வேண்டும்.அப்போதுதான் இவனைப் போன்ர Facebook வீரர்களுக்கு கொஞ்ஞம் ரோசமாவது வரும்

    ReplyDelete
  2. எங்களில் ஒருசிலருக்கு எந்தநிலையில் எப்படிப்பேச,எப்படி பிரச்சினைகள் மத்தியில் நடக்கவேண்டும் ஒன்றும் தெரியாது.

    ReplyDelete
  3. சிங்களவனுக்கு தெறிந்த ஆங்கில அறிவு இவ்வளவுதான் என்பதை விளங்குங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.