Header Ads



வெடிபொருட்கள் வைத்திருந்தால் அருகிலுள்ள, பொலிஸ் நிலையத்தில் ஒப்படையுங்கள்

வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்மாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை தமது உடமையில் வைத்திருப்பவர்கள் அதனை பொலிஸாரிடம் ஒப்படைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 06 மணிக்கு முன்னர் அவை தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.