Header Ads



ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்தோருக்கு, பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை


 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று  உயிர்நீத்தவர்களுக்குக் கிளிநொச்சி நகரிலுள்ள பள்ளிவாசலில் துவா பிரார்த்தனை ஒன்று இடம்பெற்றுள்ளது.

 கிளிநொச்சியில் அமைந்துள்ள ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாசலில்  இராணுவத்தினரின் ஏற்பாட்டில்   கடந்த மாதம் 21ஆம் திகதிக் குண்டு வெடிப்பில்   இறந்தவர்களுக்காகத் துவா பிரார்த்தனையும் தொடர்ந்து வழிபாடும்  இடம்பெற்றதையடுத்து நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைக்கான  காரணங்கள்  தொடர்பான  கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

 இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட  படை முகாம்களின் கட்டளைத் தளபதி  மேஜர் ஜெனரல் ரவிப்பிரியவி்ன் தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

 இதன்போது  கிளிநொச்சி மாவட்ட  இராணுவ அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





2 comments:

  1. They should have done this much earlier than this.

    ReplyDelete
  2. காபிர்களுக்கு மறுமைநாளுக்காக துஆ கேற்பது ஹறாம், தவிர இவ்வுலக விடயதிற்காக அனுமதிக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.