Header Ads



இஸ்லாமியர்களின் அறிவுறுத்தலுக்கேற்பவே, பயங்கரவாதிகளின் உடல்களுக்கு மத அனுஷ்டானம் செய்யவில்லை

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்த தீவிரவாதிகள் 10 பேரின் உடல்களும் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை களின் பின்னர் பொலிசாரினால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மத தலைவர்களின் அறிவுறுத்தலுக்கேற்ப, மத அனுஷ்டானங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்படாது, குறித்த நபர்கள் அடக்கம் செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில்  இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஆயினும் குறித்த வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 6 சிறுவர்களின் உடல்களையும், பொலிசாரின் தலையீட்டுடன், உரிய மத அனுஷ்டானங்களுக்கு அமைய  நல்லடக்கம் செய்யப் பட்டதாக, அவர் சுட்டிக்காட்டினார்.

1 comment:

  1. கல்முனை பொலிசாரின் மனிதாபிமான அணுகுமுறைக்கு நன்றிகள்

    ReplyDelete

Powered by Blogger.