Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளே நில்லுங்கள்...!

இந்த நாட்டில் நீங்கள் ஒரு போதுமே எதிர்க் கட்சியில் இல்லை. ஆனால் இந்த நாட்டு முஸ்லிம்களான நாங்கள், சிங்கள மக்களால் எதிரிகளாகவே நோக்கப் படுகிறோம்.

எங்கள் பள்ளிவாசல்கள் பட்டப் பகலிலேயே தாக்கி அழிக்கப் படுகின்றன. எங்களையும், எங்களின் மத தலங்களையும் பாதுகாக்க உங்களால் முடியாமல் போயுள்ளது. இந்த ரமளானிலே நீங்கள் நிம்மதியாகத் தூங்க, எங்கள் பெண்களும், சிறு குழந்தைகளும், வயோதிபர்களும் காடுகளுக்குள் இரவைக் கழிக்கிறோம். குறைந்தது உங்களுக்கு வெட்கமாவது இல்லையா? எல்லாம் நடந்து முடிந்த பிறகு போய் ஆறுதலா? ஏன் உமது இரத்தமில்லையா நாங்கள்.

நீங்கள் பதவிலிருந்து விலகுவதால் ஒரு வகையான அளுத்தமாகவாவது சிங்களவர்களுக்கு இருக்குமல்லவா? குறைந்தது ஒரு கவனயீர்ப்பையாவது அது தருமல்லவா? தயவு செய்து நன்றாக யோசித்துப் பாருங்கள் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. தேசிய கட்சிகளோ, எதிர்க் கட்சிகளோ, தனியாக நீங்கள் வைத்திருக்கும் இனவாதக் கட்சிகளோ எதிலுமே நீங்கள் இருப்பதால் ஒன்றுமே சமூகத்துக்கு ஆகி விட வில்லையே போய் விடுங்கள். உங்கள் இடங்களை நிரப்ப நாங்கள் ஆட்களைத் தேடுகிறோம், அல்லது வேற்று மத நல்லவர்களை நாடிச் செல்கிறோம். நீங்கள் கட்சி அமைத்து மக்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாமல் உள்ளதே என்று உங்களுக்கு வெட்கம் வர வில்லையா? ஓ.. உங்களுக்கு அது வர வாய்ப்பே இல்லியே. உங்கள் சொகுசு வாகனம், பதவி, பட்டங்கள் உள்ளதே அது போதும் உங்களின் நோக்கம் நிறைவேற.

நீங்கள் அனுபவிப்பதும், ஆடை அணிவதும் உங்கள் மக்களுக்காக என்பீரே அது வெறும் பொய் தானே. பாவிகளோடு கைகோர்த்து எங்கள் மக்களை அழிக்கும் நீங்களும் குற்றவாளிகளே. என்பதை ஒவ்வொரு பாமர உங்கள் வாக்காளர்களும் பேசிக் கொள்கிறார்களே அதை நீங்களோ, உங்கள் மன சாட்சியோ ஏற்றுக் கொள்ளுமா? ஓ... நீங்கள் கேட்கலாம் "தாங்களும் பாராளுமன்றத்தை விட்டு வர வேண்டும் என்பதே சிங்கள காடையர்களின் நோக்கம் அதை நிறைவேற்ற சொல்கிறீர்களா?" என்று. இதைத்தான் நாங்களும் நினைத்திருந்தோம். அது உங்கள் பதவியைத் தக்க வைக்கவே சொல்லும் கதை என்றாகி விட்டது. நன்றாக நடிக்கிறீரே. மற்ற பேரின தலைவர்கள் போல. உங்களுக்குத் தெரியுமா? எத்தனை பள்ளிவாசல்கள், எத்தனை வீடுகள், எத்தனை எம்மவர் உயிர்கள் சேதமடைந்தனவென்று? உங்களால் இணைந்த கட்சியாலோ, உங்கள் பதவிகளாலோ சமூகத்திற்கு ஒன்றுமே இல்லை எனின் ஏன் நீங்கள்? என்பதே எங்கள் நியாயமான ஆதங்கம். ப்ளீஸ் விலகி விடுங்கள். அது நமக்கு நல்லதாக அமையலாம். ப்ளீஸ்....

ஆதம் லைவ்வை நௌபீர்.

6 comments:

  1. Brother, we have to unite and overcome this situation.

    ReplyDelete
  2. பன்னீகளின் கூட்டமே இந்த 21 இழிவு நாய்கள் நிச்சயம் அல்லாஹ் கேவலப்படுத்ததிவிட்டான் அணிலுக்கு சூ கழுவிறவதானோ

    ReplyDelete
  3. All Muslim diasporas must work systematically to report to international organizations, community in different levels and human rights commission in UN. Collect all the evidences from Sri Lanka and submit in a professional ways to international communities.

    We can not depend on our Muslim politicians in Sri Lanka. From the past experiences, president will take some Muslim politicians to UN difference to address that there is no any problems for Muslims in Sri Lanka. So we must submit concrete evidences with footage of trials happened against Muslims.

    ReplyDelete
  4. A MUSLIM NEVER LIE.MUSLIM POLITICIANS,BY VOTING AGAINST NO CONFIDENCE,AGAINST R W.
    THEY DENIED THAT NO INCIDENT HAPPENED IN DIGANA & NO ROBBERY HAPPENED CENTRAL,WHICH THE WHOLE WORLD KNOWS.
    THERE WAS VERY BIG STORY BEHIND THIS,SAYING BILLIONS OF RUPEES WERE TRANSACTED ACCORDING TO ALL MEDIAS.I DONT KNOW HOW FAR IT'S TRUE.MUSLIM POLITICIAN ARE NOT FOOLS.ONLY THE MUSLIM VOTERS ARE FOOLS WHO ELECTED THEM.
    MY BROTHER FAZIL,ARE THESE CONCRETE EVIDENCE NOT ENOUGH.

    ReplyDelete
  5. A VERY VALUABLE NOTICE,BY BRO NOUFEERTO MUSLIM POLITICIANS,BY NAME.
    ITS MORE THAN ONE YEAR FOR DIGANA INCIDENT.STILL NO COMPENSATION PAID.
    DAMAGE FOR AMPARA MOSQUE,ACCORDING TO NEWS I READ IS 26 MILLION.
    GOVERNMENT HAS AGREED TO PAY ONLY ONE MILLION.
    THESE MUSLIM POLITICIANS ARE VERY POWERFULL MINISTERS IN THIS GOVERNMENT.

    ALLAHU AKBAR.

    ReplyDelete

Powered by Blogger.