அபாயா விற்பனை நிலையங்கள் வெறிச்சோடின - புர்கா, நிக்காப்கள் அகற்றப்பட்டன
வழமையாக வாடிக்கையாளர்களினால் களைகட்டியிருக்கும் அபாயா விற்பனை நிலையங்கள் இன்று வெறிச்சோடிப்போயுள்ளன. அபாயா விற்பனை நிலையங்களிலும், ஆடையகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த புர்கா, நிக்காப்கள் அகற்றப்பட்டுவிட்டன.
புர்கா மற்றும் நிகாப்புடன் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம் பெண்களைக் காண முடியவில்லை. கறுப்புநிற அபாயாவுடனான பெண்களையும் வெளியில் குறைந்த எண்ணிக்கையிலே காணமுடிகிறது.
நாட்டில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புபட்ட முஸ்லிம் தீவிரவாதிகள் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதால் வந்தவினை இது. முஸ்லிம் தீவிரவாதிகளின் அடையாளம் முகத்தை மூடி அணியும் ஆடை என்பது இப்போதல்ல நீண்டகாலமாகவே பெரும்பான்மை இன இனவாதக் குழுக்களால் பிரசாரம் செய்யப்பட்டு வந்தது. தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் புர்கா, நிகாபுக்கு மாத்திரமல்ல அபாயா, ஹிஜாபுக்கும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்தது.
முகத்தை மூடி அணிவதை இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்புகள் ஜனாதிபதிக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தன. தீவிரவாதிகள் முகத்தை மறைத்து ஆடையணிந்து மேலும் தாக்குதல்களை நடாத்தலாம் என அதற்குக் காரணம் தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இம்மாத ஆரம்பத்தில் அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் முகத்திரை அணிய தடைவிதித்தார். பாதுகாப்புக் காரணங்களுக்காக இலங்கையில் முகத்தை மூடி ஆடை அணிவது தொடர்பில் வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பகரமான நிலைமையினை உருவாக்கியது.
‘ஒருவரது அடையாளத்தை மறைக்கும் வகையில் முழு முகத்தையும் மூடக்கூடிய எந்தவொரு ஆடையையும் பொது இடங்களில் அணியமுடியாது. முழுமுகம் என்பது ஒருவரது காதுகள் உள்ளிட்ட முழு முகத்தையும் குறிப்பதாக அமையும். பொது இடம் எனக்குறிப்பிடுவது பொதுவீதிகள், கட்டடங்கள், அடைக்கப்பட்ட அல்லது திறந்த வெளிகள், வாகனங்கள் அல்லது ஏனைய போக்குவரத்துச் சாதனங்களைக் குறிப்பதாக அமையும். பொதுவீதிகள் என்பது வீதிகளுடன் தொடர்புபடும் பொதுப்பாலத்தின் மேலான ஏதேனும் வீதிகள், நடைபாதைகள், வாய்க்கால், ஏரிக்கரை, சாக்கடை என்பவற்றையும் உள்ளடக்கும்’ என்று ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் தெரிவித்தது.
‘காதுகள் வெளித்தெரிய வேண்டும்’ என்ற வர்த்தமானி அறிவித்தல் பெண்களின் ஹிஜாபுக்கும் தடையாக அமைந்தது. இதனையடுத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து அரசாங்க வர்த்தமானியில் திருத்தங்களைச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். முகத்தை மூடி ஆடை அணிவதற்கான தடையினை வரவேற்ற முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளும் அரசியல் தலைமைகளும் காதுகளை மூடி ஹிஜாப் அணியும் வகையில் வர்த்தமானியில் திருத்தங்களைச் செய்யுமாறு வேண்டிக்கொண்டனர்.
இதேவேளை நாட்டில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட வில்லை. நிகாப் மற்றும் புர்கா அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். ‘முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளன. முழுமையாக முகத்தை மறைத்தல் என்பது காதுகளையும் சேர்த்து மறைப்பதையே குறிப்பிடுகிறது. எனினும் இது ஹிஜாப் தடை செய்யப்பட்டுள்ளதாக அர்த்தப்படாது. பெண்கள் ஹிஜாப் அணியமுடியும். புர்கா மற்றும் நிகாப் என்பனவே அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
என்றாலும் முஸ்லிம் சமூகம் வர்த்தமானி அறிவித்தலில் திருத்தத்தையே வேண்டி நின்றது. இதனையடுத்து ஜனாதிபதியினால் கடந்த ஏப்ரல் மாதம் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் ஆடைக்கு தடைவிதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 13 ஆம் திகதி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தல் இவ்வாறு தெரிவிக்கிறது.
‘ஏதாவது ஆடை, உடுப்பு அல்லது துணிமணிகள் ஒருவரை அடையாளம் காண ஏதேனும் வகையில், சிரமமாக்கும் வகையில் முழு முகத்தையும் மறைக்கும் வண்ணம் பொது இடத்தில் இலங்கைப் பிரஜையால் அணியப்படலாகாது. இவ்வாறு அணிபவர்கள் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, பொலிஸ் அதிகாரிகள் அல்லது சிவில் பாதுகாப்புப்படை உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் ஒருவரை அடையாளம் காண காதுகள் உட்பட முழுமுகத்தையும் மறைக்கும் எந்த ஒன்றினையும் அகற்றவேண்டி நேரிடும். இங்கு முழுமுகம் எனக் குறிப்பிடப்படுவது நெற்றியில் இருந்து வாய்க்குக் கீழுள்ள நாடி வரை என்பதாகும். இங்கு காதுகள் உள்ளடங்காது என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இற்றைக்கு 15 அல்லது 20 வருடங்களுக்கு முன் கொஞ்ஞம் கற்பனை பன்னிப் பாருங்கள்.ஏன் உங்கள் உம்மா,உம்மம்மா அவரின் உம்மா எந்த ஆடகலை அனிந்தார்கல்.அவர்கள் மானம்,மரியாதையோடு வாழவில்லயா? இந்த அபாயா கலாச்சாரம் எங்கிருந்து/எப்போது வந்தது.islam வேறு, ஒவ்வொரு கண்டங்கள் மற்றும் நாடுகளில் வாழும் Muslim கலின் உடை,உனவு வேறு.எனவே Islam என்ர போர்வையில் எங்கோ இருக்கின்ர நாடுகளில் அங்கே இருக்கும் கால நிலைக்கேர்ரவாரு அவர்கள் பயன் படுத்தும் ஆடையை எம்மவர்கலின் மீது திணித்ததுத்தான் இன்ரைய பிரச்சினக்கும்,சிங்கள இனவாத அமைப்புக்களின் அசுர வளர்ச்சிக்கும் மிக பிரதான காரணி.எனவே Islam மார்க்கத்துக்குல் இருப்பதைத்தான் பின்பற்ற வேண்டும் ஒழிய எங்கேங்கேயோ வாழ்கிற Muslim கலின் உடை,உணவு,நடை,பாவனையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.அல்-குராஆனில் உண்பதற்காக நாம் பாவிக்க வேண்டிய,பாவிக்க கூடாத பிராணிகளை கூட சொல்லப் பட்டிருக்கிரது.ஆனால் ஆடை பற்றி அதுவும் அபாயா அதுவும் பல கலர்கல்,பல டிசைன்கல் பற்றி எங்கும் கூறவில்லை.சில தவ்ஹீத் அமைப்பினரின் பண மோகம் மற்றும் சில குடும்பங்களின் வரட்டுக் கொரவம்,அதிகமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலைக்காக அங்கே பணி செய்த பெண்கள் இப்படியானவர்கலினால்தான் நம் நாட்டில் இந்த அபாயா புயல் கடந்த 15 or 20 வருடங்களுக்குள் வீச தொடங்கியது.
ReplyDeleteப்