Header Ads



பதியத்தலாவ ரஹ்மானியா ஜூம்மாபள்ளி, மௌலவி குற்றமற்றவர் என விடுதலை

தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு எனக்கூறி போலி குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட பதியத்தலாவ ரஹ்மானியா ஜூம்மா பள்ளிவாயலின் மௌலவி குற்றமற்றவர் என விடுதலை..

சென்ற வாரம் மூன்றாம் திகதி பதியத்தலாவ இலிருந்து காத்தான்குடி சென்றுகொண்டிருந்த வேளையில் பதியத்தலாவ ரஹ்மானியா ஜூம்மா பள்ளிவாயலின் கடமை புரியும் மௌலவி அவர்களை போலி குற்றச்சாட்டின் பேரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் இவருடைய கையடக்கத் தொலைபேசியில் தீவிரவாதி ஸஹ்ரான் செய்த பயான்களை பார்வை இட்டு இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டு எட்டாம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு எந்தவித ஆதாரங்களும் அற்ற நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதாவது எட்டாம் திகதி தெஹியத்தகண்டிய நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் இவர் குற்றமற்றவர் என்றும் இவருக்கும் 21 ஆம் திகதி நடைபெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்றும் விடுதலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

No comments

Powered by Blogger.