Header Ads



தளர்ந்து விடாதீர்கள், நம்பிக்கையும் இழந்து விடாதீர்கள்..!!


மனிதம் தொலைத்த மானிடக்காட்டேரிகள் அவர்கள்,
மனு மாமிசத்தை இரையாக்கும் கழுகுகள் அவர்கள்,
ஈவிரக்கமற்ற பிர்அவ்னின் பிள்ளைகள் அவர்கள்,
தீர்க்கட்டும் அவர்களின் பசியை இரத்தங்களை ஓட்டி.

ரமழான் நோன்பதை நோற்று,
இறையருள் வாசம் தேடிய உங்கள் வாப்பாவைத்தொலைத்த அவலம்தான் புரிகிறது, 
"நோன்பை எங்கும்மா திறப்பார் வாப்பா" எனக்கேட்கும் அந்தப்பிஞ்சுக்குச் சொல்லுங்கள்,
சுவர்க்கத்தின் கனிகள் பானங்களுடன் சுகமாற திறப்பார் என்று.

உயிர்த்தியாகியை (ஷஹீதை) தந்தையாகப்பெற்ற புனிதர்கள் நீங்கள்,
ஸஹரில் உங்களை எழுப்பிய தந்தையை இப்தாரில் தேடும் அழுகுரல் கேட்காமலா போய்விடும் அவருக்கு, 
அவர் சிந்திய இரத்தத்தின் வாடையை முகர்ந்து பாருங்கள்,
சுவர்க்கத்து பாலாறுகளின் மணங்களாகவே வீசும் அவை.

உருக்கலைந்த வாப்பாவின் உடம்பைப்பார்த்து பதபதைத்த அந்த வேதனையின் அளவு என்ன தெரியுமா?
நிச்சயமாக அல்லாஹ் விடமாட்டான் இவர்களை,
அழகிய பொறுமைதான் நமக்கு இனித்தேவை,
நிச்சயமாக உங்கள் பொறுமை, உலகம் அதைவிடப்பெரியது

தளர்ந்து விடாதீர்கள், நம்பிக்கையும் இழந்து விடாதீர்கள்,
இறைநீதி அது விசித்திரமானது, 
அர்ஷுடைய நிழலில் ஊசலாடுகிறது,
கொஞ்சம் பொறுங்கள்
நிச்சயமாக இறங்கும், அதுவரை நிராசையடையாதீர்கள்

நீங்கள் அழும்போது உங்கள் தாயும் அழுகிறாளா,
அவளைவிட 70 மடங்கு இரக்கமுடையவன் உன் ரப்பு, 
சும்மா விடமாட்டான் இவர்களை,
சுழற்றி எடுப்பான் பாருங்கள்

நாம் வாழ வந்தவர்கள் அல்ல,
வாழ்வைத்தயார் செய்ய வந்தவர்கள், 
இவர்கள் நமக்கு நீதி மறுத்தாலும், 
அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வோம் இந்தக்காட்டேரிகளை

ஏய் முஸ்லிமே! நாம் செய்யும் பாவங்களே இவை,
கொடியவர்களை அல்லாஹ் சாட்டி விட்டான் எம்மீது,
பாவத்தை விட்டு பாவமீட்சி பெறு, 
இதை விட அத்தாட்சியங்கள் இனி என்ன வேண்டும் எமக்கு.

சுஐபு ஹம்துல்லாஹ்

5 comments:

  1. அழ்ழாஹ்விடம் உறுதியான நம்பிக்கை வைத்து அவனிடம் பொறுப்புச்சாட்டி அதேநேரம் தைரியமாக வாழ்வோம்!

    ReplyDelete
  2. Please don't publish this kind of rubbish.we are not in the mood of read your bluffing.

    ReplyDelete
  3. Allahuakbar
    உண்மைஉண்மைஉண்மை
    அருமைஅருமைஅருமை
    தொடரட்டும்உங்கள்பணி

    ReplyDelete
  4. اللهُمَّ أَعِزَّ الإِسْلامَ وَالمُسْلِمِينَ، اللهُمَّ أَعِزَّ الإِسْلامَ وَالمُسْلِمِينَ، وَأَذِلَّ الشِّرْكَ وَالمُشْرِكِينَ وَدَمِّرْ أَعْدآءَ الدِّينِ وَاحْمِ حَوْزَةَ الإسْلامِ يَا رَبَّ العَالَمِينَ.
    Allahumma a'izzal-Islama wal-Muslimeen, Allahumma a'izzal-Islama wal-Muslimeen, wa adhillash-shirka wal-Mushrikeen, wa dammir a'daa’ad-deen, wahmi hawzatal-Islami ya rabbal-3alameen.
    O Allah! Raise the standing of Islam and the Muslims. O Allah! Raise the standing and the Muslims, and degrade the standing of Kufr and the Kaafireen, and Shirk and the Mushrikeen. Destroy the enemies of the Deen, and protect the lands of Islam, O Lord of the Worlds.

    ReplyDelete

Powered by Blogger.