லண்டனில் இலங்கை முஸ்லிம்கள், மேற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது
அஸ்ஸலாமு அலைக்கும்.
இலங்கை முஸ்லிம்கள் மீதான அநீதியை கண்டித்து இலண்டனில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடாத்துவது தொடர்பில் SLMDI சில நாட்களுக்கு முன் ஒரு செய்தியை பதிவிட்டிருந்தது.
அது தொடர்பில் ஒரு பொறுப்புள்ள அமைப்பு என்ற வகையில் மேலதிக விபரங்களை வழங்குகின்றோம். குறித்த செய்தியின் பின்னர் எமது அமைப்பைச் சேர்ந்த பல அனுபவமிக்க சகோதரர்கள் எம்மைத்தொடர்புகொண்டு பல்வேறு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்தனர்.
அவர்களது கருத்துக்களுக்கமைய, இலங்கையில் தற்போது ஒரு சுமூக நிலை இருப்பதாலும் இன்ஷா அல்லாஹ் திட்டமிட்ட எமது ஆர்ப்பாட்டத்தை சற்று காலம்தாழ்த்தி நடாத்தலாம் என்று தீர்மானித்துள்ளோம். அத்துடன் அவ்வாறானதொரு போராட்டத்திற்கான ஆயத்தங்களையும் இப்போதே தொடங்க எண்ணியுள்ளோம் இன்ஷா அல்லாஹ்.
- SLMDI UK -
Post a Comment