Header Ads



இனக் குரோதத்தின் உச்சம், முஸ்லிம் சமையல் கலைஞர் சமைத்ததை புறக்கணித்த சிங்களவர்கள்


குருணாகலில் நடந்த திருமணம் வைபவம் ஒன்றில், முஸ்லிம் சமையல் கலைஞர் ஒருவர் சமைத்த உணவுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ம் திகதி கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது சமையல் கலைஞராக முஸ்லிம் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் உணவை புறக்கணித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

திருமண நிகழ்வில் உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்காக மதிய உணவு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விருந்தினர்கள் பலர் வீட்டிற்கு வந்த பின்னர் குறித்த திருமண உணவை முஸ்லிம் சமையல் கலைஞர் ஒருவரே சமைத்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு முன்னர், அந்த பிரதேசத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இன பாகுபாடு இன்றி குறித்த சமையல் கலைஞரே சமையல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக குறித்த கலைஞரின் உணவுகளை புறக்கணித்துள்ளனர். திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் தம்பதியரை வாழ்த்தி விட்டு உணவு பெற்றுக்கொள்ளாமல் சென்றுள்ளதாக குறித்து ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

මඟුල් ගෙදර ආහාර වේල මුස්ලිම් කෝකියකු විසින් පිළියෙල කිරීම ගැන උරණ වූ නෑදෑයන් හා ආරාධිතයන් ආහාර භුක්ති විඳීම ප්‍රතික්ෂේප කිරීමේ සිද්ධියක් ගල්ගමුවෙන් වාර්තා වනවා.

පසුගිය 24 වැනිදා ගල්ගමුවට නුදුරු ජයබිම ජනපදයේ එක්තරා නිවෙසක පැවැත්වූ මංගල සාදයට නිවැසියන් විසින් නෑදෑ හිතමිත්‍රාදීන්ට ආරාධනා කර තිබුණේ දහවල් භෝජන සංග්‍රහයටයි.

ආරාධිතයන් කිහිපදෙනකු නිවෙසට පැමිණි පසු දැක ඇත්තේ එදින ආහාර වේල සූදානම් කර ඇත්තේ නුදුරු ගමක මුස්ලිම් කෝකියකු විසින් බවයි.

මෙයට පෙර මෙම ප්‍රදේශයේ සෑම නිවෙසකම පැවැති මංගල සාදවල දී සහ වෙනත් උත්සවවලදීත් මළ ගෙයක් සිදුවූ අවස්ථාවලදීත් ජාතිභේදයකින් තොරව ආහාර සකසන්නේ මෙම මුස්ලිම් කෝකියා විසිනි.

මංගල සාදයට පැමිණි පිරිස් ආහාර නොගෙන සුබ පැතුම් හා පරිත්‍යාගයන් මනාල යුවළට ලබාදී ගොස් ඇති අතර මේ බැව් ආරංචි වූ බොහෝ ආරාධිතයන් නොපැමිණි බවත් පසුගියදා ඇතිවූ සිද්ධීන් මුල්කරගෙන මෙම සිදුවීම සිදුවූ බවත් පැවසෙනවා.

එච්.එම්.සී. ඉලංගකෝන්

5 comments:

  1. ஒரு வேலை வந்த நாதாரிகள் மாட்டு கரத்தைல வந்திருப்பாங்களோ....
    எப்படியும் பெட்ரோல்,டீசல் முஸ்லிம் நாட்ல இருந்து வருவதால் தரமானவங்க பாவிக்க மாட்டாங்க...

    ReplyDelete
  2. Ippadi eattanai nalaiku kuraikum idtha naai pasi wadtha thana odi varum

    ReplyDelete
  3. This is too much and going overboard.

    ReplyDelete
  4. அப்பாவி மக்கள் இப்படியான இனவெறிக்கு தல்லப்பட காரணம் என்ன❓

    ReplyDelete
  5. Racism . If we fail to stop it Now.
    "This country will burn very soon because of Racist Activities".

    ReplyDelete

Powered by Blogger.