Header Ads



ஒரு முஸ்லிம் நபரைக் கூட தண்டிப்பதற்கு, பிரபாகரன் எமக்கு உத்தரவிட்டதில்லை - கருணா

விடுதலைப்புலிகள் அமைப்புடன் கருத்து முரண்பாட்டின் அடிப்படையில் நான் வெளியேறியிருந்தாலும் தலைவர் பிரபாகரன் மீது பொய்யாக ஒருபோதும் குற்றம் சாட்ட முடியாது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் இராணுவத்தளபதியாக செயற்பட்டிருந்த காலப்பகுதியில் ஒரு முஸ்லிம் நபரைக் கூட தண்டிப்பதற்கு எமக்கு உத்தரவிட்டதுமில்லை. அனுமதித்ததும் இல்லை.

இறுதிவரையில் அவர் அவ்வாறான நிலைப்பாட்டுடன் தான் இருந்தார். அரசியல் குளிர்காய்வதற்காக உண்மைகளை மறைக்க முடியாது.

முஸ்லிம் தலைவரை இலக்கு வைப்பதையோ முஸ்லிம் மக்களின் மத்தியில் பதற்றத்தினை ஏற்படுத்துவதையோ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை.

அதனை கொள்கையாகவும் வகுத்து பற்றுறுதியாக செயற்பட்டு வந்திருந்தார். தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அவர் என்றுமே விரும்பியது கிடையாது அதுவே அவருடைய முடிவாகவும் இருந்தது.

இதனைவிடவும் தமிழ் முஸ்லிம் இன உறவைப் பேணுவதற்கான பலபேச்சுக்கள் விடுதலைப்புலிகளுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்றிருந்தது.

குறிப்பாக மு.கா தலைவர் ஹக்கீமை வன்னிக்கு அழைத்து தலைவர் பிரபாகரன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். அப்பேச்சுக்களின்போது நானும் கலந்துகொண்டிருந்தேன்.

அதன்போது தலைவர் பிரபாகரன் நாங்கள் உரிமைகளுக்காக போராடுகின்றோம். நீங்களும் தமிழ் பேசுகின்ற சமுகம் ஆகவே உங்களுக்கு தேவையான ஒத்தாசைகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம் என்று தான் ஹக்கீமிடம் கூறினார்.

மாறாக முஸ்லிம்களுக்கும் தானே தான் தலைவர் என்று கூறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

11 comments:

  1. Nee kadenthu vanthe ireththe pathaiyai thirumbipar.. kattankudy , eravur muslimgelin ireththeme athigam.

    ReplyDelete
  2. உண்மைதான் பிரபாகரன் சரக்கு அடித்த பிறகுதான் கத்தாங்குடி பள்ளி மற்றும் ஏறவூர் பள்ளி மற்றும் இரவில் ஊர்களில் . முஸ்லிம் செல்வந்தர்களை கடந்தி கப்பம் கேட்டு மற்றும் கொலை செய்தது. பிரபாகரன் சரக்கு அடித்து கடும் போதையில் இருக்கும் போதே உத்தரவிட்டார் மற்றப்படி அவர் முஸ்லிம் சமூகத்தை கொலை செய்யவில்லை .ஒரு தீவிரவாதியை நியாப்படுத்தி பேசும் ஒரு தீவிரவாதி எங்களைப் பொருத்தவரை சஹ்ரான் , பிரபாகரன் இருவரும் மனித பிணங்களை திண்ணும் மிருகங்கள் . நாய்கள் இரண்டு செத்துவிட்டது.

    ReplyDelete
  3. Appo neenga seithethellaam...!!!!
    Hi Hi Hi Hi

    ReplyDelete
  4. ஆனால் தற்போதுள்ள அநேகமான தமிழ் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி குறை பேசுவதையே தனது அரசியல் சாணக்கியமாக கருதுகின்றனர்.ஆனால் தமிழ் மக்களுக்கு செய்த சேவை என்ன என்று பார்த்தால் அங்கு எதுவும் குறிப்பிடும் அளவுக்கு இல்லை.
    தயவுசெய்து மற்றைய அரசியல்வாதிகளை பற்றி குரோத மனப்பான்மையுடன் பேசுவதைவிடுத்து , மற்ற சமூகத்தினரை பற்றி குறைகூறுவதை விடுத்து தான் தன்னுடைய சமூகத்துக்கு என்ன செய்யப் போகிறேன் என்பதை தனது ஒவ்வொரு நிகழ்விலும் தெரியப்படுத்தும் போது தான் ஒரு சிறந்த அரசியல் பயணத்தை கொண்டு செல்லலாம் என்று நம்புகிறோம்.

    ReplyDelete
  5. அண்ணா நீங்கள் காத்தான்குடி பள்ளி படுகொலை,ஏராவூர் சிறு குழந்தைகள் உட்பட ஈவிரக்கம் இல்லாத கொலைகள்,வட பகுதி Muslim மக்கள் விரட்டல் (சிறு பெண் குழந்தைகளின் காது தோட்டை கூட கழற்றி பறித்த கேவலம்) இன்னும் எத்தனயோ Muslim கள் பக்கத்து தமிழ் ஊரைக் கடக்கும் போது தனி நபராகவோ,குடும்பத்தினருடனோ கொல்லப்பட்டு கானாமல் ஆக்கப் பட்ட எத்தனையோ சம்பவங்கள்.இப்போ நீர் அன்னே ஏதாவது கனவு கண்டு புலம்புரீரோ.யாரையும் நீங்கள் மடையர்களாக நினைத்துக்கொல்லக்கூடாது.

    ReplyDelete
  6. அய்யோ அய்யோ. அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை

    ReplyDelete
  7. Really ??? If so why he kicked out 200000 Muslims from Jaffna withing number of hours with limited items in hand ?

    Do not spit looking up, it will come back to your face back.

    You destroyed the country but we construct this sweet land. We Muslim Stood with central government always and will do in future too..

    ReplyDelete
  8. பிரபாகரன் ஐயா முஸ்லிம்களைக் கொல்லவில்லையென்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் கருணா அம்மான்தான் முஸ்லிம்களை வகைதொகையாகக் கொன்று குவித்தான் என்ற விபரமும் விலாவாரியாக எங்களுக்குத் தெரியும்.

    ReplyDelete
  9. Suhud:ஈனப்பிறவி பிரபாகரனுக்கு என்னடா ஐயா விழிப்பு

    ReplyDelete
  10. Yes, Prabharan might not ordered, but you mr.alukosu did adamantly. Because the northern LTTE was blaming eastern LTTE as they don't carryout leader's orders...

    ReplyDelete
  11. 30 வருடமாக இவர் நாட்டுக்கு அளப்பரிய சேவை செய்தவர் அதனால் இவர் சொல்வதை கேளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.