Header Ads



இலங்கை முஸ்லிம்களின் பரிதாபம் குறித்து, தமிழ்நாட்டு சஞ்சீகை வெளியிட்டுள்ள கவிதை


அவர்கள் 
எங்கள் வீடுகளை எரிப்பார்கள், 

அவர்கள் 
எங்கள் கடைகளை எரிப்பார்கள், 

அவர்கள் 
எங்கள் பள்ளிகளை எரிப்பார்கள், 

அவர்கள் 
எங்கள் உடைமைகளை எரிப்பார்கள், 

அவர்கள் 
எங்கள் புர்காவை கழற்ற சொல்வார்கள் ,

நாங்கள் 
அவர்களுடன் நல்லிணக்கம் பேசுவோம். 

நாங்கள் 
அவர்களுடன் விகாரைக்கு செல்வோம். 

நாங்கள் 
அவர்களுடன் அரசியல் செய்வோம். 

நாங்கள் 
அவர்களுடன் பால் சோறு உண்போம்.

குமுதம் - Kumudam

Ko Nathan

1 comment:

  1. நாங்கள் பள்ளிகளையும் வீடுகளையும் கடைகளையும் கட்டுவோம்,அவர்கள் அவற்றை மீண்டும் உடைப்பார்கள் தீ வைப்பார்கள். பௌத்த காடையர்கள் எல்லா இடங்களிலும் அவர்களுடைய கைங்கரியங்களை செய்து காண்பிக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.