தமிழரைப் போல நடித்த முஸ்லிம் நபர், கருத்தடை மாத்திரைகளை உணவுப் பொருட்களில் கலக்கவில்லை - காவற்துறை
மூதூர் கிளிவெட்டியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் தமிழரைப் போல பாவனை செய்துவந்த முஸ்லிம் நபர் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலயத்தின் பூசகருக்கு உதவியாளராக இருந்து வந்த அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும் அவர் கருத்தடை மாத்திரைகளை கோவில் உணவுப்பொருட்களில் கலந்தார் என்று அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படவில்லை என்று மூதூர் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் கடந்த தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அடுத்த மாதம் 3ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த அவர் எதற்காக இந்துவைப்போல் நடித்து ஆலயத்தில் பணியாற்றி வந்தார் என்பது தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகிறது.
Post a Comment