Header Ads



சகல மத்ரஸாக்களையும், உடனடியாக தடை செய்ய வேண்டும் - பந்துல குணவர்தன

சட்டவிரோதமான முறையில் நாடுதழுவிய ரீதியில்  செயற்பாட்டில் உள்ள அனைத்து  மத்ரஸா பாடசாலைகளும்  உடனடியாக தடை செய்ய வேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, இப் பாடசாலைகளை கல்வியமைச்சு, முஸ்லிம் விவகார அமைச்சு ஆகியவற்றின் கீழ் கொண்டுவருவது பிரச்சினைகளுக்கு  குறுகிய கால தீர்வை மாத்திரமே வழங்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று -26- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இஸ்லாமிய மற்றும் அரபு  கற்கை நெறிகளை அடிப்படையாகக் கொண்ட  மத்ரஸா  பாடசாலைகள் அனைத்தும் நாடுதழுவிய ரீதியில் சட்ட விரோதமான முறையிலே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.