Header Ads



பௌத்த கிறிஸ்த்தவ வன்முறையாளர்களினால், கோடிக்கணக்கான முஸ்லிம்களுடைய சொத்துக்கள் நாசம்

நீர்கொழும்பு, பலகத்துறை, செல்லக்கந்த உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அப்பாவி முஸ்லிம்களுடைய சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டு, அல்லது தீ மூட்டப்பட்டு நாசம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை மீள் பாவிக்க,  முடியாதளவு சேதங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முஸ்லிம்களுடைய வீடுகள், தளபாடங்கள், வாகனங்கள் என பல பெறுமதிமிக்க பொருட்கள் சிங்கள கிறிஸ்த்தவர்களினால் தாக்கி நாசம் செய்யப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் மின்சாரம் திட்டமிட்டு நிறுத்தப்பட்டு, அதன்பின் முஸ்லிம்களுடைய உடமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

மற்றும் சில பகுதிகளில், அச்சத்தினால் முஸ்லிம்கள் தமது வீடுகளில் மின்சாரத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனை தமக்கு சாதகமா பயன்படுத்தியுள்ள வன்முறையாளர்கள், அந்த வீடுகள் மீதும் கோழைத்தனமான தாக்குதல்களை தொடுத்துள்ளனர்.

குறிப்பாக முஸ்லிம்களுடைய சொத்துக்களை தாக்கி. சேதம் ஏற்படுத்துவதிலேயே வன்முறையாளர்கள் குறியாக செயற்பட்டதாக. சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன் தமது சொத்துக்கள் தாக்கப்படும்போது. சில இடங்களில் முப்படையினர் வேடிக்கை பார்த்ததாகவும் மற்றும் சில சந்தர்ப்பங்களில் தாம் அவசரகால தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்தபோதும். உரியவாறு தமக்கு பதில் வழங்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வன்முறையாளர்களினால் தாம் பரம்பரை பரம்பரையாக சேர்த்துவைத்த உடமைகளுக்குக்கூட, சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த வன்முறையாளர்களினால் முஸ்லிம்களுடைய கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டு அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6 comments:

  1. Very sad situation. Always the innocent people suffer. All people especially the Tamils, who also suffered like this, don't like to see this happening to the muslims, having to listen to them grieving in the mother tongue.

    ReplyDelete
  2. ஆரம்பத்தில் இருந்தே வன்முறை அமைப்பை ஆராயும்போது இது தன்னெளுச்சியான மக்கள் மோதல்களாக தென்படவில்லை. முதலில் இருந்தே முஸ்லிம் தரப்பு பயங்கர வாதிகளும் சிங்கள வன்முறையாளர்களும் சிங்கள அழும் மற்றும் எதிர்கட்ச்சிகளின் வாக்கு வங்கி அரசியலில் காய்களாக நகர்த்தபட்டதை உணர முடிகிறது. சம்பவங்கள் எனக்கு நெஞ்சு நோவை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நிலமைகளை ஆராய்ந்து அறிய முடியுமோ தெரியவில்லை

    ReplyDelete
  3. Government must compensate the loss and arrest the culprits.

    ReplyDelete
  4. oru siru kuluvinaral seyde pilayku .ottu moththa naga enna seyya.idu sari waradu

    ReplyDelete
  5. சிங்கள பௌத்த கிறிஸ்தவர்கள் மகா வீரர்கள் என்பது இப்படியான கோர சம்பவங்களினால் அடிக்கடி மீள்நினைவூட்டப்படுகின்றமை எங்கள் நாட்டிலும் இப்படியான வீரமிக்க மகா வீரர்கள் இருக்கினறார்கள் என்பதனை உறுதிப்படுத்துகின்றது.

    ReplyDelete
  6. instead of fighting together to eradicate terrorism, these idiots are attacking muslims and making more enemies. good job.

    ReplyDelete

Powered by Blogger.