Header Ads



"தீவிரவாத ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை, எடுக்கமுடியாத முதுகெலும்பற்ற அரசாங்கமே இது" - மரிக்கார்

“தீவிரவாத ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத முதுகெலும்பில்லாத அரசாங்கமே எமது அரசாங்கம்”

இவ்வாறு இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார் ஆளுங்கட்சியின் எம் பி மரிக்கார். அவர் மேலும் கூறியதாவது ,

மகப்பேற்று கட்டுப்பாட்டை சிசேரியன் மூலம் செய்த மருத்துவர் ஒருவர் குறித்து ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது .டாக்டர் குறித்து விசாரணைகள் நடப்பதாக கூறினாலும் நான் இதுபற்றி தேடியபோது அப்படி எந்த விசாரணைகளும் நடப்பதாக தெரியவில்லை.

நாலாயிரம் சிசேரியன் சிகிச்சைகள் ஒரு டாக்டர் செய்ய வேண்டுமாயின், ஒரு நாளைக்கு ஒரு சிசேரியன் சிகிச்சை என்று பதினோரு வருடம் அவர் செய்திருக்க வேண்டும் . இதில் உண்மை இருக்குமா ? அரச மருத்துவ சங்கம் என்ன செய்கிறது? ஏன் மௌனம் காக்கின்றனர்.இப்படியான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத முதுகெலும்பற்ற நிலையில் தான் எமது அரசு இருக்கிறது – என்றார் மரிக்கார் எம் பி

2 comments:

  1. There is no government in Sri Lanka.......

    ReplyDelete
  2. நீங்கள் ஆளும் கட்சி தானே ஐயா

    ReplyDelete

Powered by Blogger.