பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு வங்கி, கணக்கை அறிவித்தது ஜம்இய்யத்துல் உலமா
முஸ்லிம்களுக்கெதிராக புத்தளம், குருநாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற இன வாத தாக்குதல்கள் காரணமாக பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
தாக்குதல் இடம் பெற்ற பகுதிகளில் பாதிப்புக்கள் பாரிய அளவில் காணப்படுவதால் பாதிக்கப்பட்ட எமது சகோதரர்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர பல உதவிகள் செய்யும் தேவை ஏற்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நாட்டு மக்களை இவ்விடயத்தில் அதிகமாக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர்.
அத்துடன் எதிர்வரும் ஜுமுஆ தினங்களில் இவர்களுக்கான உதவிகளை (பணமாக) சேகரித்து கீழ்வரும் ஜம்இய்யாவின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறும், அதன் வைப்புச்சீட்டுக்களை 0776185353 என்ற ஜம்இய்யாவின் வட்ஸப் இலக்கத்திற்கு அனுப்பி அதற்கான பற்றுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளுமாறும் பள்ளிவாசல் நிர்வாகிகளை ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.
அல்லாஹுத்தஆலா நம் அனைவரினதும் தான, தருமங்களைப் பொருந்திக் கொள்வானாக.
All Ceylon Jamiyyathul Ulama
AC NO 1901005000
Commercial Bank
IBU - Branch
Swift Code – CCEYLKLX
All Ceylon Jamiyyathul Ulama
AC NO 0010112110014
Amana Bank
Main Branch
Swift Code - AMNALKLX
Great move. We want to help our fellow Muslim brothers collectively.
ReplyDeleteமுதலில் அரசுடன் சட்டப்படி உள்ள தொடர்பை மட்டும் பேனி .அரசிடம் முளு நஸ்டஈடையும் கண்டிப்பான தொனியில் கேட்க வேண்டும். கிடைக்கும் வரை சட்டப்படி வேலை.
ReplyDeleteமுதலில் அரசுடன் சட்டப்படி உள்ள தொடர்பை மட்டும் பேனி .அரசிடம் முளு நஸ்டஈடையும் கண்டிப்பான தொனியில் கேட்க வேண்டும். கிடைக்கும் வரை சட்டப்படி வேலை.
ReplyDelete