Header Ads



நாம் ஏன் ஹபாயாவைக் கழட்டி, கையில் கொண்டுபோக வேண்டும்? தாடியை ஏன், வழிக்க வேண்டும்..?

ஜெமீல் எம் சஜா (கபூரி)

பயங்கரவாத_தடைச்சட்டம் / அவசரகாலச்_சட்டம்

நம் நிம்மதியை உறுதிப்படுத்துவதற்கானது நடைமுறைப்படுத்தப்படுவதற்கானது...

நம் நாட்டின் அமைதியை அமுல்படுத்துவதற்காறது...

நம் நாடட்டின் இறைமையைப் பாதுகாப்பதற்கானது...

நம் நாட்டில் சமாதானம், அமைதி, சகவாழ்வைக் கட்டி எழுப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டிருப்பது...

மொத்தத்தில்

நம் பாதுகாப்புக்கானது

தீவிரவாதத்திற்கு எதினானது

அதைக் கண்டு நாம் ஏன் அஞ்ச வேண்டும்?
நாம் ஏன் ஒடி ஒழிய வேண்டும்?
நாம் ஏன் கூனிக் குறுக வேண்டும்?
நாம் ஏன் எமது அன்றாட செற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்?

நாம் ஏன் ஹபாயாவைக் கழட்டிக் கையில் கொண்டுபோக வேண்டும்?

நாம் ஏன் தாடியை வழிக்க வேண்டும்?

நாம் ஏன் நமது நாட்டு சட்டம் அனுமதித்த நமது உரிமைகளையும் சுதந்திரத்தையும் தாரைவார்த்துக் கொடுக்க வேண்டும்?

நாம் பயரங்கரவாதிகளுமல்ல தனி நாட்டுக் கோஷம் எழுப்பி அப்பாவி உயிர்களைக் கொண்றவர்களுமல்ல

தசாப்தங்கள்தாண்டியும் நாட்டின் அமைதியை சீர்குலைத்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுமல்ல

பயங்கரவாதத்தையும் மனிதப்படுகொலைகளையும் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ ஆதரித்தவர்களுமல்ல ஆதரிக்கப்போகின்றவர்களுமல்ல.

நாட்டின் இறைமையைக் கேள்விக்துறியாக்கி எம் தாய் நாட்டைக் கூறூ போட்டு பங்குகேட்டு
நம் நாட்டின் வளங்களை நாசப்படுத்தி
பொருளாதாரத்தை வீழவைத்து.. சகவாழ்வை சீர்குலைத்து..
அமைதியை அழித்து...
நின்மதியை_ நிர்கதியாக்கி..
அப்பாவிகளைக் கொன்றுகுவித்து...
பொது இடங்களில் குண்டுவைத்துக் குதூகலித்த பயங்கரவாதிகளுமல்ல...

இன்றுவரை மனசாட்சியே இல்லாமல் மனித மிருகங்களுக்கு வீர வணக்கம் செலுத்தி மாவீரர்தினம் கொண்டாடும் ஈனப்பிறவிகளுமல்ல..

அத்துனையும் செய்துவிட்டு புணர்வாழ்வு பெற்று கருத்துச் சுதந்திரம் என்றபெயரில் விஷம் கக்கி இனவாதம் தூண்டும் மனித மிருகங்களும் இந்நாட்டில் நின்மதியாய் வாழும் அளவுக்கு பாதுகாப்புப் படையில் சேர்ந்து உயிர்தியாகம் செய்து நாட்டின் அமைதிக்காய் முழுமூச்சாய் உழைத்தவர்கள்...

நாம் ஏன் தினம் தினம் பயந்து நடுங்கி சாக வேண்டும்?

நாம் முஸ்லிம்கள்

என்றும் அமைதியையும் சமாதானத்தையும் விரும்புவர்கள்

பயங்கரவாதத்திற்கும் மனிதப்படுகொலைக்கும் எதினானவர்கள்

இனங்களுக்குடையிலான சக வாழ்வைக் கட்டி எழுப்பி நாட்டில் அமைதியை உருவாக்கத் துடிப்பவர்கள்

தீவிரவாதிகளையும் நம் நாட்டின் தேசத்துரோகிகளையும் ஐந்து - பத்து நாட்களுக்கு அடக்கி ஒடுக்கிவிட அரசுக்கு துணையாகநின்று துணிந்து செயற்பட்டவர்கள்... பாதுகாப்புப் படையினருக்கு பக்க பலமாக நின்று காட்டிக் கொடுத்தவர்கள்...

சில முஸ்லிம் பெயர்தாங்கிகளால் சரிந்து போயுள்ள சமாதானத்தையும் 
நம் தேசத்தின் அமைதியையும் மீளக் கட்டியெழுப்ப முழு மூச்சாய் உழைத்துக் கொண்டிருப்பவர்கள்..
நாம் ஏன் அஞ்சவேண்டும்?
இந்த சட்டம் நமக்கானது, நம் பாதுகாப்புக்கானது....

புரிந்து கொள்வோம் 
அச்சம் தவிர்ப்போம்

அன்றாட வாழ்வை அமைதியாய் கழித்து
ரமழானின் பயன்களை பயன்படுத்திக் கொள்வோம்

இறைதிருப்தி பெற்று ஈருலகும் வெல்வோம் இன்ஷா அல்லாஹ்

1 comment:

Powered by Blogger.