Header Ads



பொலன்னறுவையில் பங்களாதேஷ் நாட்டுப் பெண் கைது

பொலன்னறுவை, நிஷ்ஷங்கமல்லபுர பிரதேசத்தில் விசா இன்றி தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலன்னறுவை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

35 வயதுடைய பங்களாதேஷ் நாட்டுப் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட பெண் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.