Header Ads



ஞானசாரருக்கு தகவல் தெரிந்தது எப்படி..? விசாரிக்குமாறு அசாத்சாலி ஜனா­தி­பதிக்கு கடி­தம்

நாட்­டி­லுள்ள 50 பன்­ச­லை­களில் தற்­கொலை குண்டுத் தாக்­குதல் நடாத்­து­வ­தற்கு முஸ்லிம் தீவி­ர­வா­திகள் திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் தெரி­வித்­தி­ருக்­கிறார். இந்தத் தகவல் எங்­கி­ருந்து கிடைத்­தது என சி.ஐ.டியி­னரை அனுப்பி விசா­ரணை செய்­யு­மாறு கோரி மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்ளார்.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

தற்­போது சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் வெசாக் மற்றும் பொசன் பண்­டி­கை­களின் போது மக்­களை பன்­ச­லையில் ஒன்று கூட வேண்டாம் எனக் கோரி­யுள்­ள­துடன் 50 பன்­ச­லை­களைத் தாக்­கு­வ­தற்கு தீவி­ர­வா­திகள் திட்­ட­மிட்­டி­ருக்­கி­றார்கள் எனவும் தெரி­வித்­துள்ளார்.

மேல­திக தக­வல்கள் தேவைப்­ப­டுவோர் சிறைச்­சா­லைக்கு வந்து தன்னைச் சந்­திக்க முடியும் எனவும் தெரி­வித்­துள்ளார். எனவே இந்தத் தக­வல்கள் எங்­கி­ருந்து கிடைத்­தன? யாரால் எப்­போது கிடைத்­தன? என்­பது தொடர்பில் அறிந்து கொள்­வ­தற்­காக சி.ஐ.டியினரை சிறைச்சாலைக்கு அனுப்பி அவரை விசாரிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vidivelli

2 comments:

  1. Great. CID must investigate this Terror Monk. He was the Monk/Terror who destroyed the peace of this country.

    ReplyDelete
  2. He should be investigated

    ReplyDelete

Powered by Blogger.