Header Ads



முஸ்லிம் தலைவர்களையும் கடத்தி, சிறைவைக்க திட்டமிட்ட ஸஹ்ரான்

 (எம்.எப்.எம்.பஸீர்)

மட்டக்களப்பு, வாழைச் சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரிதிதென்ன பகுதியில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாதி ஸஹ்ரானின் பயிற்சி முகாம் என தெரிவிக்கப்படும் இடத்தில் காணப்பட்ட நிலக் கீழ் அறைகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமது கொள்கைக்கு எதிரான முஸ்லிம் தலைவர்கள் உள்ளிட்டோரைக் கடத்திச் சென்று குறித்த நிலக் கீழ் அறைகளில் சிறைவைக்க திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இது தொடர்பில் மேலதிக தகவல்களை வெளிப்படுத்த, அது தொடர்பில் கைதாகியுள்ளோரிடம் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.