ஜனாதிபதி பயணித்த விமானம் விபத்துக்கு உள்ளானதாக, செய்தி பரப்பிய மாணவனுக்கு விளக்கமறியல்
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கடந்த 13 ம் திகதி சீனா நோக்கி சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாக செய்தி பரப்பிய பல்கலைகழக மாணவனை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேறு எவரோ வடிவமைத்த குறித்த தகவலை அந்த மாணவன் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளதாக அவரது சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டிய போதும் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்துள்ளது.
Post a Comment