Header Ads



விமல் வீரவன்சவுக்கு, முஜிபுர் ரஹ்மான் தக்க பதிலடி

விசேட வியாபார பண்ட அறவீடுகள் கட்டளைகளை அங்கீகரிப்பது மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு முஜிபுர் ரஹ்மான் (ஐ.தே.க) உரையாற்றும்போது,

நாட்டின் தேசிய நல்லிணக்கம் ஒற்றுமையை விரும்பாதவர்களே பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை சுயநல அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் அரசாங்கம் கட்டியெழுப்பிவந்த நல்லிணக்க வேலைத்திட்டங்கள் அனைத்தும் பயங்கரவாத தாக்குதல் காரணமாக நொடிப்பொழுதில் அழிவடைந்திருக்கின்றது.

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக அரசாங்கத்துகே பாரியளவில் இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. அத்துடன் இந்த தாக்குதலால் முஸ்லிம் சமூகத்துக்கும் பாரிய தலைகுனிவு ஏற்பட்டிருக்கின்றது. முஸ்லிம் மக்கள் ஒருபோதும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கமாட்டார்கள். என்றாலும் இன்று முஸ்லிம் மக்களை சந்தேகம் கண்ணோடு பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

குறிப்பாக விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தொடர்ந்து முஸ்லிம் உறுப்பினர்களை விமர்சித்து வருகின்றார். ஆனால் அவ்வாறு விமர்சிக்க முன்னர் விமல் வீரவன்சவின் வரலாறை திருப்பிப்பார்க்க வேண்டும். 88, 89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெற்கில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களையும் பொலிஸாரையும் கொலை செய்து வந்தவர். இளைஞர்களை பிழையாக வழிநடத்தி நாட்டில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர். இன்று அவர் உத்தமர்போல் செயற்படுகின்றார்.

பயங்கரவாத செயலுக்காக மாற்று பெயர்களை பயன்படுத்தி வந்தவர். இன்றும் சட்டவிரோத செயலுக்காக நீதி மன்றில் வழக்கு இருந்து வருகின்றது.

மேலும் இந்த பயங்கரவாத தாக்குதலால் அரசாங்கத்துக்கே அதிகம் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. நாட்டில் கட்டியெழுப்பி வந்த நல்லிணக்கம் சிதைவடைந்திருக்கின்றது. இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால் சர்வதேச சக்தி இருக்கலாம். இதனை கட்டுப்படுத்த வேண்டும். முஸ்லிம் சமுகம் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

ஏனெனில் முஸ்லிம் மக்களே இன்று பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் பயங்கரவாதத்தை கூண்டோடு ஒழிக்க பாதுகாப்பு பிரிவுக்கு முஸ்லிம் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் ஒத்துழைத்து வருகின்றனர்.

1 comment:

Powered by Blogger.