Header Ads



நீர்கொழும்பில் முஸ்­லிம்களுக்கு, ஏற்பட்ட சேத விபரம் வெளியாகியது - பணம், நாகைகளும் கொள்ளை


ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை  ஏற்­பட்ட முறு­கலை அடுத்து நீர்­கொ­ழும்பு நகரில் முஸ்­லிம்கள் அதிகம் வாழும் பிர­தே­சங்­களில் வன்­முறைச் சம்­ப­வங்கள் பதி­வா­கின. இந்த அசம்­பா­வி­தங்­க­ளின்­போது வீடுகள் பல தாக்­கப்­பட்­ட­துடன் உடை­மை­களும் சேத­மாக்­கப்­பட்­டன. பள்­ளி­வாசல் ஒன்றும் தாக்குதலுக்கு இலக்கானது.

சில வீடு­களில் நகைகள் , பணம் மற்றும் பொருட்கள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர். இந்த சம்­ப­வத்­தின்­போது பல வாக­னங்கள்  தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­ட­துடன் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் சிலர் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

அசம்­பா­வித சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­போது நீர்­கொ­ழும்பு பிராந்­திய பொலிஸ் பிரிவில் ஊர­டங்குச் சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­டது. ஆயினும் ஊர­டங்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட வேளையில்  இனந்­தெ­ரி­யாத குழுக்கள் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­களும் தெரி­விக்­கின்­றனர்.

பெரி­ய­முல்லை லாசரஸ் வீதி, பெரி­ய­முல்லை செல்­ல­கந்த வீதி, தளு­பத்தை, கல்­கட்­டுவை வீதியில் சமகி மாவத்­தையில் அமைந்­துள்ள வீடுகள் பல­வற்றின் மீது தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் முச்­சக்­கர வண்­டிகள், மோட்டார் சைக்­கிள்கள் ஆகி­யன தாக்கி சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. பெரி­ய­முல்லை லாசரஸ் வீதியில் தெனி­ய­வத்த பிர­தே­சத்தில் உள்ள பள்­ளி­வா­சலின் யன்னல் கண்­ணா­டிகள்  உடைக்­கப்­பட்­டுள்­ளன.

சம்­ப­வத்தை அடுத்து முஸ்லிம் மக்கள் பெரும் அச்­சத்­துடன் இருந்­தனர். சிலர் தமது உற­வி­னர்­க­ளு­டைய வீடு­க­ளுக்கு பாது­காப்பு தேடிச் சென்­றனர்.

பள்­ளி­வாசல் மீதும் தாக்­குதல்

இதே­வேளை நீர்­கொ­ழும்பில் தெனி­யா­வத்த அசனார் தக்­கியா பள்­ளி­வாசல் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளின்­போது தாக்­கப்­பட்­டுள்­ளது. தக்­கியா பள்­ளி­வா­சலின் 8 கண்­ணா­டிகள் உடைக்­கப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­சலின் குர்­ஆன்கள் வைக்­கப்­பட்­டி­ருந்த கண்­ணாடி பெட்­டியும் உடைக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு பெரிய முல்லை கல்­கட்­டுவ, செல்­லக்­கந்த பகு­தி­களில் 50 வீடுகள் தாக்­கப்­பட்­டுள்­ளன. ஒரு வீட்டில் நகை­களும், பணமும் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. பொருட்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. 10 முச்­சக்­கர வண்­டிகள், 6 மோட்டார் சைக்­கிள்­களும் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. வீடு­களின் கத­வுகள் கோட­ரி­யினால் தாக்கி சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன என பெரிய முல்லை ஜும்ஆ பள்­ளி­வா­சலின் செய­லாளர் இஸ்­மதுல் ரஹ்மான் தெரி­வித்தார்.

நேற்று முன்­தினம் நீர்­கொ­ழும்பில் நடை­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில், வன்­முறைச் சம்­ப­வங்கள் இப்­ப­கு­தியில் ஊர­டங்குச் சட்டம் அமு­லி­லி­ருந்த இரவு 8.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடை­யி­லேயே இடம்­பெற்­றுள்­ளன. திட்­ட­மிட்டு இவ் வன்­மு­றைகள் முஸ்­லிம்கள் மீது நடாத்­தப்­பட்­டுள்­ளன. பெரிய முல்லை பள்­ளி­வா­சலில் பாது­காப்பு கட­மை­யி­லி­ருந்த சிவில் பாது­காப்பு வீரரும் பயத்­தினால் ஓடி­யுள்ளார். பல­கத்­து­றையில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான 7 கடைகள் தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன என்றார்.

வன்­முறைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்ற பகு­தி­க­ளுக்கு நேற்று பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோர் விஜயம் செய்­தனர்.

கொழும்பு வடக்கு பிரதி பொலிஸ் மாஅ­திபர் தேச­பந்து தென்­ன­கோனும் விஜயம் செய்தார். வன்­முறை இடம்­பெற்ற பகு­தி­க­ளுக்கு இரா­ணுவம், பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர், விமா­னப்­படை வீரர்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

நீர்­கொ­ழும்பு பகு­தியைச் சேர்ந்த பள்­ளி­வா­சல்­க­ளுக்கு விஷேட பாது­காப்பு வழங்­கு­மாறு பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் பொலிஸ் மா அதி­பரை கோரி­யுள்­ளன.

நேற்றுக் காலை அப் பிர­தே­சத்தில் அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த ஊரங்கு தளர்த்­தப்­பட்­ட­நி­லையில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. முப்­ப­டை­யி­னரும் பாது­காப்புக் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். பிர­தே­சத்தில் அமைதி நில­வு­கின்ற போதிலும் மக்கள் அச்­சத்­து­ட­னேயே உள்­ள­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

No comments

Powered by Blogger.