Header Ads



புலிப் பயங்கரவாதிகள் பயன்படுத்திய, ஆயுதங்கள் கண்டுபிடிப்பு - பெண் ஒருவர் கைது


ஏப்பிட்டமுல்ல பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றிலிருந்து,  புலிகள் அமைப்பால் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 193 துப்பாக்கி ​ரவைகளும்  89 ரக ஆர்.ஜி.பி ​ரவையொன்று மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது, பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த ​ரவைகள் பழங்காலப் பொருள்களாக வீட்​டின் அலங்காரத்துக்காகப் பயன்படுத்துவதற்காக கொண்டு வந்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

வீட்டின் மேல் மாடிக்குச் செல்வதற்காக, அமைக்கப்பட்டிருந்த படி வரிிசையின் கீழ் உள்ள அலுமாரியொன்றில் சிறு சிறு பைகளில் சுற்றப்பட்டு, புலி இலட்சிணையுடனான பெரிய பை ​ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இவை மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.