Header Ads



கொழும்பிலிருந்து 50.000 குடும்பங்களை, வெளியேற்ற திட்டம் - முஸ்லிம்களே அதிகம்

கொழும்பில் வாழும் 50 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அகற்றி, அந்தப் பகுதிகள் வர்த்தக நடவடிக்கைகக்கு வழங்கப்படவுள்ளது.

50 ஆயிரம் குடும்பங்கள் வாழும் 400 ஏக்கர் காணியில் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மாளிகாவத்தை ரயில் நிலையத்திற்கு சொந்தமான காணி, கெத்தராம அப்பிள் தோட்டம், ப்ளூமென்டல் பிரதேசத்தின் ஏரி, இரத்மலானை நீர்ப்பாசன காணி ஆகிய இடங்களில் வாழும் குடும்பங்கள் பிறிதொரு இடத்திற்கு மாற்றப்படவுள்ளனர். (இந்தப் பகுதிகள் முஸ்லிம் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது)

இவ்வாறு அகற்றப்படும் குடும்பங்களுக்காக 17000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் பெறுமதியாக வீடு ஒன்றை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆசிய வங்கியினால் உட்கட்டமைப்பு வசதிக்காக வழங்கப்படும் கடன் திட்டத்தின் கீழ் இதற்காக நிதி வழங்கப்படவுள்ளது.

மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் அமைச்சரவையில் இந்த யோசனை சமர்ப்பிக்ப்பட்டுள்ளது.

2 comments:

  1. Ewan muslimgalukku aappu adikkiratulaye kuriya erukkan nadari

    ReplyDelete
  2. Ewan muslimgalukku aappu adikkiratulaye kuriya erukkan nadari

    ReplyDelete

Powered by Blogger.