Header Ads



தர்காநகரில் 500 வீடுகளில், 2000 முப்படையினரை பயன்படுத்தி சோதனை - 2 பேர் கைது

- துசித குமார டீ சில்வா -

ஐஸ்.எஸ். ஐஸ்.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வந்தனரென்றக் குற்றச்சாட்டில், தர்காநகர்-வெலிபிட்டிய பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை,  3 மாதங்கள் வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தர்காநகரர்-வெலிபிடிய பிரதேசத்தில் 500 வீடுகள் இன்று  (02) சோதனையிடப்பட்டன. இதற்கென, 2,000 அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 7 மணிநேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 20 அடையாள அட்டைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.  

No comments

Powered by Blogger.