தாக்குதல் வீடியோக்களை வைத்திருந்த 5 இளைஞர்கள் கைது
உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதல் காணொளிகளை வைத்திருந்த 5 இளைஞர்கள் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து அலைபேசிகள், சஸ்ரானின் புகைப்படம், வனாத்தவில்லு பயிற்சி முகாமின் படங்கள், காணொளிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து கெப்பிட்டிகொல்லாவ நகரில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கெப்பட்டிக்கொல்லாவ பிரதேசத்தில் பணிபுரிந்து வந்துள்ள சந்தேகநபர்கள் வவுனியா, கிண்ணியா, காங்கேசன்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment