Header Ads



நீர்கொழும்பு வன்முறை தொடர்பில் விசாரணைக்கு 4 பொலிஸ் குழுக்கள் நியமனம்

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் விசாரணை செய்வதற்காக 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இன்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நேற்றைய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் தற்போது அப்பகுதியில் பூரண அமைதியான நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இரண்டு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய் தகராறு இதற்கு காரணமாகும். இந்த சம்பவத்தின் போது கூடுதலான மதுபானம் அருந்தியிருந்த மற்றுமொறு குழுவினர் சம்பவத்தில் தலையீடு செய்தனர். இந்த தலையீட்டை அடுத்து இங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. வெறும் கண்துடைப்பு! ஒன்றுமே நடவாது.

    ReplyDelete
  2. சம்பவம் நடக்கும் போது படையிணர் சும்மா கைகட்டிக்கு பார்த்து இருந்ததாக தகவல்கள் சொல்லப்படுகிறதே, அப்போ இந்த விசாரணைகள் சும்மா அர்த்தமற்றவைதானே?

    ReplyDelete

Powered by Blogger.