Header Ads



4000 சிங்கள தாய்மாருக்கு NTJ வைத்தியர் கருத்தடை செய்ததாக, திவயின வெளியிட்ட செய்தி பச்சை பொய்

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் வைத்தியர் ஒருவரினால் சிங்கள தாய்மார்கள் 4000 இற்கும் அதிகமானவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்திருக்கதாக பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த செய்தி உண்மையாயின் அது மிகவும் பாராதூரமான விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க இன்று -23- பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த செய்தியினால் முஸ்லிம் வைத்தியர்களிடம் மருத்துவம் பெற்றுக் கொள்வதை ஏனைய மத மக்கள் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் இந்த செய்தி மக்களுக்கு இடையில் பிரச்சினைகளை மற்றும் சந்தேகங்களை ஏற்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதனால் இந்த செய்தி தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர், அந்த செய்தியை இன்று காலை பார்த்தவுடன் அது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் புலனாய்வு பிரிவின் பிரதானிகளிடம் விசாரணை செய்ததாக தெரிவித்துள்ளார். 

இதன்போது குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பாதுகாப்பு பிரிவின் பிரதானிகள் தெரிவித்தாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. ஒரு காலத்தில் அவசரகால சட்டவிதிகளின் (ஏதோ ஒன்றின்) அடிப்படையில் நீண்ட காலம் பத்திரிகைத் தணிக்கை இருந்ததாக கேள்விப்பட்டேன். அதுபோன்ற தணிக்கை முறையை ஏதோ ஒரு சட்டத்தின் அடிப்படையில் மீண்டும் அமுல்படுத்துவது நன்று என நினைக்கின்றேன். சிங்கள மொழிப் பத்திரிகைகளைப்போல் தமிழ்ப் பத்திரிகைகளும் நாற்றம் எடுக்கின்றன.

    ReplyDelete
  2. எவ்வித உண்மையும் இல்லாத செய்தியை பிரசுரித்ததுக்காக எந்தவிதமான நடவடிக்கையை ஏன் அந்த பத்திரிகைக்கு எதிராக அரசாங்கம் எடுக்கவில்லை

    ReplyDelete
  3. Why not punish the reporter for inducing hate among people?

    ReplyDelete
  4. குறித்த செய்தியில் உண்மைத் தன்மை இல்லையெனில் அந்த போலி செய்தியைப் பிரசுரிகத்த ஊடக நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் தானே?
    இது இனங்களுக்கு இடையிலான குரோதத்தை வளர்க்கும் மிகப்பெரிய குற்றம்.......

    ReplyDelete
  5. சிங்களம் இனவாதம் பேசுது , தமிழ் நாறுது, உள்ள ஒரே வழி அரபு மொழி பத்திரிகையை இலங்கை முழுவதும் கொண்டு வருவது தானே

    ReplyDelete

Powered by Blogger.