Header Ads



புனித லைலத்துல் கத்ர் இரவில், நன்மைகளை கொள்ளையடிக்க 3 இலகுவான வழிகள்


புனித மக்காவின் இமாம் ஷெய்க் மஹெர் அவர்கள் லைலத்துல் கத்ரை அடைந்து கொள்ள சில அறிவுரைகளை தெரிவிக்கின்றார்கள்

நடைமுறைக்கு சாத்தியமான அவரது சில ஆலோசனைகள்
👇👇👇👇

1. ரமளானின் இறுதி பத்து நாட்களின் இரவில் தினமும் ஒரு ரூபாய் (ஆவது) தர்மம் செய்யுங்கள்.
அது..  லைலத்துல் கத்ர் இரவில் ஆகிவிடின் ,84 வருடங்கள் தினமும் ஸதகா செய்த நன்மையை அடைந்து கொள்வீர்கள்.

2. ரமளான் இறுதி பத்து நாட்கள் இரவில் தினமும் இரண்டு ரக அத் தொழுது  கொள்ளுங்கள்.
அது லைலத்துல் கத்ர் இரவில் அமைந்து விட்டால் 84வருடங்கள் தினமும் தொழுத நன்மையை பெற்றுக்கொள்வீர்கள்.

3. ரமளான் இறுதி பத்து இரவுகளில் தினமும் ஒரு மூன்று குல்ஹுவல்லாஹு ஸூரா ஓதிக்கொள்ளுங்கள்.

அது...  லைலத்துல் கத்ர் இரவில் ஆகிவிட்டால்.. 84 வருடங்கள் தினமும் ஒரு குர்ஆனை முழுமையாக ஓதி முடித்த அளப்பரிய நன்மையைப் பெற்றுக்கொள்வீர்கள்.

மேலும்.. இத்தகவலை மற்றவர்க்கும் அறிவித்து
அதன் நன்மையையும் பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறார்கள்.

👉 எளிமையான முறையில் எவரும் செய்ய க்கூடிய சிறப்பான விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

 அல்லாஹ் நம் அனைவருக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் லைலத்துல் கத்ரை அடைந்து அதில் சிறப்பாக அமல் செய்யவும் செய்த அமல்கள் கபூலாகவும்
தவ்ஃபீக் நல்குவானாக ஆமீன்..

No comments

Powered by Blogger.