முஸ்லிம்களுக்கு எதிரான, வன்முறையில் பங்கேற்ற 32 பேருக்கு பிணை
மினுவாங்கொடை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் உட்பட பள்ளிவாசல்கள் மீது கடந்த 13ம் திகதி இரவு தாக்குதல் நடத்தப்பட்டன.
குறித்த சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.
Post a Comment