முகத்தை மூடியதற்காக 3 குழந்தையுடன் சிறையிருந்த தாய் - விளக்கமறியலில் ஏசினார்கள், 31 வரை கணவருக்கு விளக்கமறியல்
சிலாபத்தில் முகத்தை மறைத்து ஆடையணிந்து கொண்டு சென்றதாக புகார் செய்யப்பட்ட பெண் ஒருவர் அவரது வீட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சிலாபம் – ஜயபிம என்ற கிராமத்தைச் சேர்ந்த பாத்திமா சில்மியா (25) என்பவரே அவர். அவர் தனக்கு நேர்ந்த சம்பவத்தை கவலையுடன் எம்மிடம் தெரிவித்தார்.
கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஊரில் எனது நண்பியொருவரின் வாப்பாவின் ஜனாஸாவுக்கு அவரது வீட்டுக்கு காலை 7.30 மணிக்கு எனது கணவர் மொஹமட் சாதீக் (24) உடன் சென்றேன். எங்களுக்கு மூன்று மாத குழந்தையொன்றும் இருக்கிறது. குழந்தையையும் என்னுடன் கொண்டு சென்றேன். காலை 7.30 மணிக்கு ஜனாஸா வீட்டுக்குச் சென்று 8.00 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்து விட்டேன். நான் முகத்தை மூடி ஆடை அணிந்தே சென்றேன்.
8.30 மணியளவில் ஊர் பள்ளிவாசல் என்று கூறிக்கொண்டு சுமார் ஐந்து, ஆறுபேர் வீட்டுக்கு வந்தார்கள். வீட்டில் எனது கணவரும் இருந்தார். வந்தவர்கள் எனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். ஏன் முகத்தை மூடி அழைத்துச் சென்றீர்கள். உங்கள் மீது முறைப்பாடு இருக்கிறது. ஏன் பிரச்சினைக்கு ஆளாகிறீர்கள். உங்களால் எங்களுக்குப் பிரச்சினை என்றார்கள். வாக்குவாதப்பட்டு எனது கணவரை தாக்குவதற்கும் முயற்சித்தார்கள். அவர்கள் நாட்டு நடப்பு தெரியாத எங்களுக்கு விளக்கியிருக்க வேண்டும். நல்லபடி பேசியிருக்க வேண்டும். பின்பு அவர்கள் போய்விட்டார்கள்.
9 மணியளவில் பொலிஸார் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அப்போது வீட்டில் நான் முகத்தை மூடி ஆடை அணிந்திருக்கவில்லை. சாதாரண உடையில் குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தேன். பொலிஸார் நான் முகத்தை மூடி ஆடை அணிவதாகவும் என்னிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவேண்டுமெனவும் கூறி என்னையும் கணவரையும் அழைத்துச்சென்றார்கள். நான் மூன்று மாத குழந்தையையும் எடுத்துக்கொண்டு சென்றேன்.
எங்கள் மீது யாரோ புகார் செய்தே பொலிஸார் எங்களைக் கைது செய்தார்கள். வீட்டிலிருந்த கறைபடிந்த கத்தியொன்றையும் எடுத்துக்கொண்டார்கள். எங்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார்கள். நீதிவான் எங்களை ஒரு கிழமை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். நான் எனது மூன்று மாத குழந்தையுடனேயே விளக்கமறியலில் இருந்தேன். விளக்கமறியலில் என்னை ஏசினார்கள்.
கறைபடிந்த கத்தியொன்று வீட்டில் இருந்ததற்காக எனது கணவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். நீர்கொழும்பு சிறையிலே வைக்கப்பட்டேன். ஒரு வாரத்தில் நான் பிணையில் விடுதலை செய்யப்பட்டேன். ஆனால் எனது கணவர் விடுதலை செய்யப்படவில்லை. அவர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மொஹமட் ருனைஸ்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொஹமட் சாதீக்கின் மைத்துனர் மொஹமட் ருனைஸ் சம்பவம் தொடர்பில் விடிவெள்ளிக்கு விளக்கமளித்தார். நான் புத்தளத்தைச் சேர்ந்தவன். மொஹமட் சாதீக் எனது மனைவியின் சகோதரர். எனது மைத்துனரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டமை எனது மனைவியின் தங்கையினது கணவர் மூலமே அறிந்து கொண்டோம். அவர் கட்டாரிலிருந்து பேஸ்புக்கில் விபரம் அறிந்ததாக எங்களுக்கு அறிவித்தார். அவர் கட்டாரிலே வேலை செய்கிறார். அவர் அறிவித்ததன் பின்பே நாங்கள் சிலாபத்துக்குச் சென்றோம். அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் முகத்தை மூடி ஆடை அணிந்ததற்காகவும், வீட்டில் கறைபடிந்த கத்தியொன்று இருந்ததற்காகவும் கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்கள் என்றார்.
மொஹமட் சாதீக்கின் சகோதரி யமீனா
விளக்கமறியலில் வைக்கப்பட்டி ருக்கும் மொஹமட் சாதீக்கின் சகோதரி யமீனா விடிவெள்ளிக்கு கருத்து வழங்குகையில்,
‘மொஹமட் சாதீக் எனது சகோதரர். நாங்கள் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள். எனது சகோதரர் 2 வருடங்கள் கட்டாரில் வேலை செய்து நாடு திரும்பியதன் பின்பே திருமணம் செய்தார். இப்போது கடல் தொழில் மற்றும் கூலிவேலை செய்து வருகிறார். எனது சகோதரரும் அவரது மனைவியும் அப்பாவிகள். முகத்தை மூடி ஆடை அணிவதன் பாரதூரத்தை அவள் அறியாதவள். அத்தோடு கறைபடிந்த கத்தியொன்றுக்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். எனது சகோதரர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்’ என்றார்.
சட்டம் ஒன்றை தெரியாது என்பது தப்பிப்பதற்கு காரணமாக அமையாது. இவர்கள் சிறை சென்றதன் மூலம் மற்றவர்கள் அறிந்திருப்பர். ஒருவரின் அனுபவம் தான் மற்றவர்களுக்கு கல்வி.
ReplyDeleteநாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் மற்றும் அதனுடன் தொடர்பு பட்ட விடயங்கல் தெரியவில்லை என சொன்னால் நீங்கள் வேடுவ வாழ்க்கையா வாழுகிரீர்கல்.இப்படியான வரட்டுக் கொள்கை கொண்ட முட்டாள்கலால்தான் இன்ரு அடுத்த இனம் எம்மை பார்த்து சிரிக்கிறது.வீட்டில் t.v,சட்டலைட் அண்டனா,வை-பை எல்லா பித்னாக்கலையும் பார்த்தும் கேட்டும் அனுபவிப்பார்கல்.வெளியில் செல்லும் போது கோர வெட்பமும்,தூசி மணல் புழுதியும் உள்ள நாடுகளில் உள்ள Muslim கள் அந்த காலனிலையில் இருந்து பாதுகாப்புக்காக போடும் ஆடையின் இவர்களுக்குத் தேவை.எம்மவர்கலின் முட்டாள் தனத்தை நினைக்கும் போது அழுவதா அல்லது சிரிப்பதா.
ReplyDeleteரிஸாட் நாகரீகமாக கருத்து தெரிவிக்கப் பழகு.கருத்து குணவொழுக்கத்தின் நிலையை எடுத்துக்காட்டும்.
ReplyDeleteநீதிமன்றம் இத்தகைய குற்றங்களுக்கு எச்சரித்து விடுதலை செய்தல், நீதிமன்றம் கலையும்வரை சிறை, ஓரிரு வாரங்கள் பொலிஸில் கையொப்பமிடல் அல்லது ஒத்திவைக்கபட்ட தண்டனைகள் வளங்க வேண்டுமென அரசுடனும் அட்டோனி ஜெனறலுடனும் பேசி ஏற்பாடு செய்யவேண்டுமென முன்னைநாள் நிதிஅமைச்சரும் என் அன்பு தோழருமான தலைவர் றவூப் ஹஹ்ஹீம் அவர்களை ஜப்னா மூஸ்லிம் ஊடாக கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஎன்ன அனியாயம் இது.நமது சமூகம் இவர்களை குற்றம் பிடிக்கிறது.இப்படி இந்த பெண்ணை பொலிசில் சொல்லி கொடுத்தவன் எப்படி பட்டவனாய் இருப்பான் @Rizard நீ கேடபதோ பார்ப்பதோ மட்டும் சரி என்று காணாதே உனக்கும் தாய்,சகோதரி,மனைவி மற்றும் பிள்ளைகள் இருக்கும் அல்லாஹ்வை பய்ந்து கொள்.அல்லாஹ் இம்மி அளவேனும் அனியாயம் செய்யமாட்டான் நாம் வாழ்வது மறுமைக்கு அன்னாலில் நீ கைசேதப்படுவனாய் மாறிவிடாதேய்.
ReplyDelete@ Rizard ponra modayann comment ai delete sei. may be racist ah irukalam.muslim nameil msg panalam
ReplyDelete