Header Ads



உலக வரைபடத்தை வைத்திருந்த, முஸ்லிம் நபர் கைது - திஹாரியில் 2 பிள்ளைகளின் தந்தைக்கு கொடுமை


- Akbar Rafeek -

திஹாரியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நிட்டம்புவ பொலிஸில் மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார்.

பின்னர் அத்தனகல்ல மஜிஸ்ரேட் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு எதிர்வரும் ஜுன் 11 ம் திகதி வரை பயங்கரவாத தடுப்புச்சட்டம் பிரிவு 3 (a)(b),5(a)(b) பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இவர் செய்த குற்றம் என்ன?

இவரிடமிருந்து உலக வரைபடம் ஒன்றை ராணுவத்தினர் கண்டெடுத்துள்ளனர்.(அநேகமாக வீட்டை சோதனையிடும்போது கண்டெடுத்து இருக்கலாம்).அப்படத்தில் அவரின் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனினால் கைப்பட கிறுக்கியதாகும். வரலாற்றுப்பாடத்தைக்கற்கும் சிறார்கள் உலக,மற்றும் இலங்கை வரைபடங்களை வைத்திருப்பார்கள்.

குறிப்பிட்ட படத்தில் இலங்கை மற்றும் பாரசீகப்பெரும்பரப்பு ‘பூம்’ என்ற ஆங்கில சொல்லினால் வட்டமிட்டுக்காட்டப்பட்டிருப்பதுவே கைதுக்கான காரணமாகும்.

ஐந்தாம் தரம் மட்டுமே படித்துள்ள முச்சக்கரவண்டி ஓட்டுனராவர் ஆங்கிலத்தில் எழுதப்படிக்கத்தெரியாதவர் என அவரின் சட்டத்தரணி இவரின் விடுதலைக்காக வாதாடுகின்றார்.

DIG அவர்களிடம் முறையிட்டு குற்றம் அற்றவர் என பொலிஸாருக்கு அறிவுருத்தல் வழங்கப்பட்டும் விடுதலை செய்யப்படவில்லை.

அப்பாவி மனிதர்களின் கைதுகள் குறைந்தபாடில்லை. விடிவும் விடுதலையும் பொலிசாரினதும் ராணுவத்தினரினதும் கையிலேயே உள்ளது.

மாணவர்கள் வரலாறு,புவியியல் பாடத்தில் நதிகள்,நகரங்கள்,குளம் குட்டைகள்,பாதைகளை வரைபடங்களில் குறிப்பதும்,பெளத்த தளங்கள் சின்னங்களை குறிப்பதுவும் இன்னோரன்ன குற்றச்சாட்டுகளுடன் பெற்றோர்கள் சிறை செல்லக்காரணமாகுமோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

1 comment:

  1. Jesus Christ is solution of this world. Jesus say im the way the true and the life came to me and you will know God how he is. Ready bible the you can find life

    ReplyDelete

Powered by Blogger.