Header Ads



பேருவளையில் 15 வாள்கள், பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு

பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்டதை அடுத்து பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு 15 வாள்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பேருவளை பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் போது மேலும் 15 வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று மற்றும் நேற்று முன்தினம் மேற்கொண்ட சோதனைகளின் போதே இவ்வாறு வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

குறித்த வாள்களை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.