Header Ads



தீவிரவாதிகளின் 140 மில்லியன் ரூபா பணம் 7 பில்லியன் ரூபா சொத்துக்களும் இனங்காணப்பட்டுள்ளன

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளின் சொத்துக்கள் தொடர்பான விபரத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இனங்கண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் 140 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான பணம் மற்றும் 7 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இன்று -06- கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இவற்றில் ஒரு தொகை பணத்தை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் ஏனைய பணத் தொகை வங்கியில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

எனவே குறித்த வங்கிக் கணக்கை முடக்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அத்துடன் அவர்களின் ஏனைய சொத்துக்கள் தொடர்பபாகவும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சொத்துக்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. வெளிநாட்டு நிதிமூல
    ங்களில் இயங்கும்
    அனைத்து அமைப்புக்
    களும் இனங்காணப்ப
    டல்வேண்டும். அவற்
    றின்மீதான முழுமை
    யான தடைகளின்
    மூலமே எதிர்கால
    பாதுகாப்பை உறுதி
    ப்படுத்தமுடியும்.

    ReplyDelete
  2. தேடுதல் என்ற பெயரில் சாதாரண போதுமஹனின் வீட்டில் இருக்கும் பணதையும் கொள்ளை அடித்து வருகிறார்கள்..

    ReplyDelete

Powered by Blogger.