Header Ads



10 தற்கொலைதாரிகளின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டது

கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் குண்டு தாக்குதலில் உயிரிழந்த குண்டுதாரிகளின் 10 பேரின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் மற்றும்  நீதிமன்ற பரிசோதனைகள் என்பன நிறைவடைந்துள்ள நிலையில் அவர்களது சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று -02- இடம் பெற்ற ஊடகசந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் ,

கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாத குழுவுக்கும் இடையில் இடம் பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலின் போது மீட்கப்பட்ட 10 பயங்கரவாதிகளினது சடலங்கள விசாரணையின் பின் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை , இந்த சம்பவத்தில் 6 சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். ஆகவே அவர்களது சடலங்களை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.