Header Ads



SMS அனுப்ப ஜனாதிபதி, எவ்வளவு செலவிட்டார்..?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி வைப்பதற்காக எவ்வளவு தொகை செலவிட்டார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சித்திரைப் புத்தாண்டு நிகழ்வினை முன்னிட்டு தனியார் தொலைதொடர்பு நிறுவனமொன்றின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு குறுஞ்செய்தி ஊடாக வாழ்த்து செய்திகளை அனுப்பி வைத்திருந்தார்.

இவ்வாறு குறுஞ்செய்திகளை அனுப்பி வைப்பதற்கு ஜனாதிபதி செலவிட்ட தொகை எவ்வளவு என அறிந்து கொள்ள விரும்புவதாக பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் ஊடாக இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திடம் குறித்த அமைப்பு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி ஆங்கில புத்தாண்டு தினத்திலும் ஜனாதிபதி இவ்வாறு குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்திருந்தார் எனவும் அதற்காக செலவிட்ட தொகை குறித்தும் அறிந்து கொள்ள விரும்புவதாக பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

1 comment:

  1. இது ஒரு மிக மிக முக்கியமான நாட்டின் தேசிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான ஒரு செலவீனமும் நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைக்கக்கூடிய ஒரு செலவுமாகும். (ஏன்டா டேய், உங்களுக்கு வேற வேலையே இல்லையாடா. கேக்கிற கேள்வியைப் பார். கேட்க வேண்டிய எத்தனையோ இலட்சம் கேள்விகள் இருக்கின்றன. உருப்படியான கேள்வியைக் கேட்டு பதிலைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.