Header Ads



புர்காவை தடைசெய்ய வேண்டுமென்ற Mp க்கு அச்சுறுத்தல் - முஸ்லிம் அமைம்பொன்று மீது குற்றச்சாட்டு


முஸ்லிம் பெண்களில் சிலர் அணியும் புர்கா (முக மூடி) ஆடையை தடை செய்ய வேண்டும் என நேற்று (23) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையாக சமர்ப்பிக்க எடுத்த தீர்மானத்தை ஊடகங்களிடம் வெளியிட்டதன் பின்னர் அவருக்கு தொலைபேசி ஊடாக அனாமதேய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடைய பாதுகாப்பு குறித்து அவதானத்துடன் இருக்குமாறும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தொலைபேசி ஊடாக இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு தொலைபேசி அழைப்பு முஸ்லிம் அமைப்பொன்றிடமிருந்தும், மற்ற அழைப்பு உயர் அதிகாரியொருவரிடமிருந்தும் வந்ததாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

2 comments:

  1. In this situation, we should support him to remove the "Furga" Muhamoodi, its not a Islamic dress.
    It is just created by uneducated people in the name of Islam...

    ReplyDelete
  2. அப்பறோம்... யாருக்கடா பூ சுத்துறீங்கள்

    ReplyDelete

Powered by Blogger.