Header Ads



யாழ்ப்பாணத்தில் உருளைக்கிழங்கு, விளைச்சல் அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி

- பாறுக் ஷிஹான் -

யாழ்.குடாநாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை இம்முறை அமோக விளைச்சலை தந்துள்ளதாக  விவசாயிகள் குறிப்பிட்டனர்.

விதை உருளைக் கிழங்குகள் போதியளவு இறக்குமதி செய்யப்படாமையால் வழமையை விட இவ்வருடம் குறைந்தளவிலான ஹெக்டேயர் நிலப் பரப்பிலேயே உருளைக் கிழங்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.அதுவும் போதிய விதை உருளைக் கிழங்கு இன்மையால் இம்முறை யாழ்.குடாநாட்டில் 106 ஹெக்டேயர் நிலப் பரப்பில் மாத்திரமே உருளைக் கிழங்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி இம்முறை அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்டிருந்தது.உள்ளூர் விவசாயிகளின் நலனடிப்படையில் அவர்களுக்குச் சலுகை வழங்கும் வகையில் குறித்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவ்வருடம் உருளைக் கிழங்கு அறுவடை சீசன் ஆரம்பிப்பதற்கு முன்னரே வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையால் உருளைக் கிழங்குச் செய்கையாளர்கள் நன்மையடைந்திருந்தனர்.




No comments

Powered by Blogger.