பொலிஸ்மா அதிபர் மீது மட்டும் குற்றம் சுமத்தி, பணி நீக்குவதனால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது
பொலிஸ் மா அதிபர் மீது மட்டும் குற்றம் சுமத்தப்பட முடியாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்த அரசாங்கம் பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நீண்ட காலமாக திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இரண்டு அரசாங்கங்களும் இந்த குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொலிஸ் மா அதிபரை பணி நீக்குவதனால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரின் பின்னர் புலனாய்வுப் பிரிவினை வலுப்படுத்துவதற்கு தாம் கடுமையான முயற்சி மேற்கொண்டதாகவும் அதற்கு இடமளிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment