Header Ads



மோசடிகள் குறித்து, சஜித் பிரேமதாச பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார் - மஹிந்த

தற்போதைய அரசாங்க ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடிகள் இடம்பெற்று உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி ஒப்புக்கொண்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் நுவரெலியாவில் வைத்து ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் இதுவரையில் எதிர்க்கட்சியே விமர்சனம் செய்து வந்ததாகவும், ஐக்கிய தேசியக் கட்சியே தற்பொழுது மோசடிகள் குறித்து ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.